Thursday, 12 November 2015

திருப்பணியில் பங்கு கொள்வோம்

   

 
 


  திருநெல்வேலி   மாவட்டம்   களக்காடு  அருகில்  உள்ள கீழ பத்தை ஊரில்  உள்ள  அ/மி குலசேகர நாதர் திருக்கோயிலில்  திருப்பணிகள் நடை பெற்று  வருகின்றன .இக்கோயில் பழம் பெருமை  வாய்ந்தது .குலசேகரபன்டியன் மன்னன் காலத்தில்  கட்டப்பட்டது . ஆனால் இக்கோயில்  பராமரிப்பு இல்லாமல் இருப்பதைக்  கண்ட கீழ பத்தை ஊரைக் சேர்ந்தவரும் மும்பையில் வசிப்பவருமான  டாக்டர்  தாணு மூர்த்தி  அவர்கள்  திருப்பணி பக்தர்கள்  பேரவை என்ற அமைப்பை  ஏற்படுத்தி அதன் மூலம் திருப்பணிகள்  செய்யப்பட்டு வருகிறது. 1971 ம் வருடத்திற்கு  பிறகு  வருகிறபிப்ரவரி மாதம் 3,4,5ம் தேல்திகளி கும்பாபிசேகம் நடை பெற இருக்கிறது!ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும். மக்கள் அனைவரும் சேர்ந்துதான் உதவி செய்து திருப்பணிகள் நிறைவு பெற வேண்டும்!
    நம்மை தேடி வந்து யாரும் உதவி கேட்க வில்லையே என்று என்ன வேண்டாம் !இறைவன் திருப்பணிக்கு நாமே தேடி சென்று பங்கு பெற வேண்டும் !அப்போதுதான் இறைவன் நம்மை தேடி வந்து அருள் செய்வான் !
    பழமை  வாய்ந்ததும்   விஸ்தாரமானதுமான கோயிலாக  இருப்பதால்   பணம் , சிமென்ட்,  மணல்,  டைல்ஸ் ஆகியவை அதிகமாக தேவைப் படுகிறது !
   எனவே  அன்பர்கள்  மனமுவந்து  வாரி  வழங்கும்படியும்   குலசேகர நாதரின் அருள் கிடைக்கும் படியும்   திருப்பணி  பக்தர்கள் பேரவையினர்  அன்போடு வேண்டிக் கொள்ளுகிறார்கள்  !
                                               
   நாட்டில் எங்கு இருந்தாலும்  கீழ்  கண்ட வங்கிக்கு  பணம் அனுப்பினால்  டாக்டர்  தாணு மூர்த்தி அவர்களுக்கு  உடன் மெசேஜ்  சென்று விடும் ! அவர்கள் உங்களுக்கு தெரிவிப்பார்கள் !
  வங்கி விவரம்  : Thirupani Baktharkal Peravai - INDIAN OVESEAS BANK  CHEMBUR,MUMBAI-400071
  SB ACCT NO-014101000022572
   சிமென்ட், மணல், டைல்ஸ் செங்கல் கொடுப்பவர்கள் தொடர்பு  கொள்ளவேண்டிய மொபைல்  நம்பர் DR V, THANUMOORTHI -9820324945
 S. ATHMA MOHAN -9489118960
 S, MUTHUSAMI -9486643260- S. KULASEKARAN -7871777767
 P. KULASEKARAN -984211160

Saturday, 26 September 2015

மூத்த குடிமக்கள்

                         உலக முதியோர் தினம் 
                       01-10-15 வியாழக்கிழமை 
                                   

முதியோரை போற்றுவோம்!


                          உலக  முதியோர்  தினம்
                                   01-10-15 வியாழக்கிழமை 
                       

             
           

Wednesday, 16 September 2015

அந்தக் கால நினைவுகள் ! படித்த ஞாபகம் !

  முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மனைவி லலிதா  சாஸ்திரி !இவர் கவிஞரும் கூட !இவருடைய பக்தி பாடல்களை AVM கொலம்பியா  இசைத்தட்டாக சரஸ்வதி ஸ்டோர்ஸ் மூலம் வெளியிடப்பட்டது! லதா மங்கேஸ்கர் இனிய  குரலில் பாடி இருந்தார் !
                                                                
   ஏ.வி,எம் மின் மகள் வெற்றிலை பூ பழங்கள் இவைகளுடன்  அழகிய பட்டுப் புடவை ஒன்றையும் ஒரு பெரிய தட்டில் வைத்து  அதனுடன்  இசைத்தட்டையும்வைத்து  சாஸ்திரயின் மனைவியைச் சந்தித்து கொடுத்து விட்டு வந்தார் !
   ஏ.வி.எம்மின்  மகள் தம் இருப்பிடம் வந்தபோது சாஸ்திரியின் உதவியாளர் பட்டுப்புடவையுடன் காத்திருந்தார் !"நான் பிரதமரின் மனைவி  என்பதால் இதை பெறுவது முறையாக இருக்காது !உடனே  மறுத்தால் மனம் வருந்துவீர்கள் என்பதால் இப்போது அனுப்பி உள்ளேன் !"என்று கூறி விட்டுருந்தார் !இப்படியும்  இருந்திருக்கிறார்கள் !

Monday, 14 September 2015

அந்தக்கால நினைவுகள் படித்த ஞாபகம் !

                                                         ஜகத்குரு 
காஞ்சி பெரியவர்  படத்தை பத்திரிக்கையில் ஒரு ஜெர்மன் அறிஞர்  பார்த்தார் !ஒரு பரமாச்சாரியார் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே !அவரை கட்டாயம் போய்  பார்க்கவேண்டும் ! அவரை வணங்க வேண்டும் என்று தீர்மானம்  பண்ணினார் !திருநெல்வேலி பக்கத்தில் ஒரு கிராமத்தில் பெரியவர் இருந்தார் ! அவரை வரவேற்று கிராமம் முழுதும் ஜகத்குருவே வருக  வருக  என்று எழுதப்பட்டிருந்தது !ஜெர்மன் அறிஞர் பெரியவரை பார்த்தார் ! வணங்கினார் !பின்பு பெரியவரை பார்த்து  "நீங்கள்  ஒரு  மதத்திற்கு  மட்டும் தானே குரு !அப்படி இருக்கும் பொது எல்லோருக்குமே குருஎன்கிற அர்த்தத்தில் ஜகத்குரு என்று போட்டிருக்கிறதே" ! என்று கேட்டார் ! பெரியவர் சிரிக்கிறார்  !ஓ .. இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறது எனக்கு இதுவரைக்கும் தெரியாமபோயிட்டுது !நான் வந்து ஜகத்குரு அதாவது  ஜகத்தில் உள்ள எல்லா ஜந்துக்களையும் நான் குருவாக நினைச்சு வணங்குறேன் ! அவற்றிலே இருந்து நான் எத்தனையோ பாடங்கள் இன்னமும் கற்றுக்கொண்டு இருக்கிறேன் !அதாவது இந்த அகிலமே நமக்கு குரு!என்று கூறினாராம் !

Sunday, 13 September 2015

ஜோதிடம் ஒரு சாகரம்

 
 ஜோதிடக்கலை  மகா சமுத்திரம்  போன்றது ! அதில் முங்கி முத்து எடுப்பவர்களும் உண்டு ! வெறும் கிளிஞ்சல்கள் எடுப்பவர்களும் உண்டு !அவரவர்கள் திறமையை பொறுத்தது !ஏட்டுப்படிப்பை விட அனுபவம் மூலமாக தெரிந்தவர்கள் தான் திறைமைசாலிகள்  !
   ஒரு தடவை  என் நண்பரின் மனைவி பெண் ஜோதிடர் ஒருவரிடம் தன் ஜாதகத்தை  காட்டி இருக்கிறார் ! அவர் இன்னும் கொஞ்ச  நாள்தான் உங்களுக்கு இருக்கிறது !எனவே உங்கள் பிள்ளைகளுக்கு எழுதி வைக்க வேண்டியதை எழுதி வைத்து விடுங்கள் என்று கூறி இருக்கிறார் !இதை கேட்டதும் நண்பவரின் மனைவி அழுத கண்ணும் வீங்கிய  முகமுமாக வீட்டில் வந்து படுத்து விட்டார் ! என் நண்பர் வந்து பார்த்து விவரம் கேட்டிருக்கிறார் !அவர் மனைவி முழுவதையும் சொல்லி இருக்கிறார் !
 நண்பன் கவலையோடு என்னிடம் சொன்னார் ! நான் அவர்கள் இருவரையும் எனக்கு தெரிந்த பெரிய ஜோதிடரிடம் அழைத்துச் சென்றேன் !அவர் அந்த அம்மாவின்  ஜாதகம் முழுவதையும் அலசி  ஆராய்ந்து பார்த்து விட்டு  இந்த அம்மாளுக்கு ஆயுசு கெட்டி !  90 வயசு வரைக்கும் இருப்பார் ~ கவலையே வேண்டாம்  என்று கூறி அதற்கான விளக்கங்களையும் பல  புத்தகங்களை  வைத்து மேற்கோள்  காட்டி  எடுத்துக் கூறினார் ! அதோடு இது போன்று அரை குறை  ஜோசியரிடம் ஜாதகத்தை காட்டாதீர்கள்  என்றும் கூறினார் ! அதன் பிறகுதான் அந்த  அம்மாவின் முகத்தில்  களை வந்தது !
                                         
   பிரிதொரு நண்பருக்கு  நிகழ்ந்த  அனுபவம் வேறு மாதிரி ! அவர் வீட்டில் தனியாக  இருந்திருக்கிறார் ! முன் வாசல் கதவை தாழ்ப்பாள் போடாமல் இருந்திருக்கிறார் ! அப்போது ஆஜானுபாவான மனிதர் ஒருவர் கதவை திறந்து கொண்டு வீட்டிக்குள் வந்து விட்டார் ! நண்பர் " யார் நீங்கள் ?என்ன வேண்டும் உங்களுக்கு ? :என்று உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளிக் காட்டிக்கொள்ளாமல் கேட்டிருக்கிறார் ! அவர் நான் ஒரு ஜோசியர் ! உங்க வீட்டுப்பக்கம் வரும்போதே உங்க வீட்டுக்குள்ளே போ என்று எனக்கு அசரீரி வாக்கு கிடைத்தது ! அதான் வந்தேன் என்றார் !என்ன அசரீரி கிடைத்தது என்று நண்பர் கேட்டிருக்கிறார் ! அதற்கு வந்தவர்  உங்கள் பிள்ளைக்கு கண்டம் இருக்கிறது ! அதற்கு அறுபடை முருகனுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் ! அதற்கு  ஆறாயிரம் ரூபாய் செலவாகும் .செய்யவில்லை என்றால் உங்கள் பிள்ளைக்கு உயிருக்கு அபாயம் இருக்கிறது என்று கூறி உள்ளார் !
 நண்பர் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்திருக்கிறார் ! வந்தவர்
 உங்களுக்கு நம்பிக்கை இலை அல்லவா ? என்று கேட்டு ஒரு துணியை எடுத்து வாருங்கள் என்று கூறி இருக்கிறார் ! நண்பரும் ஒரு துணியை எடுத்து வந்திருக்கிறார் !  அதை பல துண்டுகளாக கிழியுங்கள் என்று ஜோசியர் கூறி இருக்கிறார் .நண்பரும் பல துண்டுகளாக கிழித்திருக்கிிறார் ! பிறகு ஜோசியர் எல்லா துண்டுகளையும்  ஒன்றாக சுருட்டுங்கள் என்று கூறி உள்ளார் ! நண்பரும் எல்லா துண்டுகளையும் சுருட்டி உள்ளார் ! இப்போது விரியுங்கள்  என்று ஜோசியர் கூற நண்பரும் விரித்திக்கிறார் ! கிழித்த துண்டுகள் எல்லாம் சேர்ந்து முன்பு இருந்தது போல ஒரே துணியாக வந்து விட்டது !
 நண்பருக்கு வியப்பு ஒரு புறம் ! பயம் ஒரு புறம் !ஆனால் நண்பருக்கு தெளிவும் தைரியமும் வந்து விட்டது ! இவருக்கு சித்து தெரிந்திருக்கிறது ! அதை வைத்து நம்மை மிரட்டுகிறார் ! இவரிடம் இருந்து ஜாக்கிரதையாக தப்பிக்க வேண்டும் ! இல்லை என்றால் நம்மை மயக்கியோ அல்லது அடித்து போட்டு விட்டோ வீட்டில் உள்ள பணம் நகைகள் இவைகளை சுருட்டிக்கொண்டு பொய் விடக்கூடும் !என்று சினிமா படம் போல மனதில் ஓடி இருக்கிறது !  
                                                           
 இவரிடம் சமாளிக்க வேண்டும் என்று எண்ணி என்னால் ஆறாயிரம் ரூபாய் கொடுக்க முடியாது என்று கூறி உள்ளார் ! இருவரும்  பேரம் பேசிப் பேசி கடைசியில்  மூன்றாயிரம் என்று முடித்திருக்கிறார் ! மூன்றாயிரம் கிடைத்து விட்டது என்று ஜோசியர் சந்தோசமாக இருக்க நண்பர் பணத்தை எடுத்து வருகிறேன் என்று கூறி உள்ளே போய் உள் கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார் ! பின்பு பக்கத்து வீட்டு காரர்களை சத்தம் போட்டு கூப்பிட அவர்கள் வருவதற்குள் ஜோசியர் எழுந்து  ஓடி விட்டார் !நண்பரின் சமயோசிதத்தை எல்லோரும் பாராட்டினார்கள் !
                                                               
    

அந்தக்கால நினைவுகள் !

  நேருவும் காமராஜரும் டில்லியில் நடந்த உலக  கண்காட்சியை பார்க்க சென்றிருந்தனர் ! நேரு  அங்கிருந்த  எடை பார்க்கும் எந்திரத்தில்  எடை பார்த்தார் !  அவருடன் சென்றிருந்தவர்களும்  எடை பார்த்தனர் ! ஆனால் காமராஜர்  மட்டும் எடை பார்க்கவில்லை ! நேரு சொல்லியும்  கேட்கவில்லை  ! பின்  நேரு  சொன்னார் !காமராஜர்  ஏன் எடை பார்க்கவில்லை தெரியுமா ?இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு  கூட இப்பொழுது  அவரிடம் இருக்காது  என்றார் !பிறகு  தானே காமராஜருக்கு காசு போட்டு எடை பார்த்தாராம் !

Friday, 11 September 2015

முகூர்த்த நேரம்




படம் கூகுள் 
இந்துக்களின்  திருமணத்தின்  போது தாலி கட்டும் நேரத்தில் சொல்லப்படும் ஸ்லோகம் !
                  மாங்கல்யம்     தந்து      நாநேந
                  மமஜீவன         ஹேதுனா
                  கண்ட்டே      பத்நாமி சுபகே
                   சஞ்சீவ        சரதஸ்   ஸதம்
    இதன் பொருள் :  இது புனிதமான  கயிறு ! நான் நல்லபடியாக  ஜீவித்திருக்க  வலிமை  பெற்றது ! இதை நான் உன் கழுத்தில் அணிவிக்கிறேன் ! நீ  சகல
  சௌபாக்யவதியாய்  நூறாண்டுகள் சுக போகங்களுடன் வாழ்ந்திருப்பாயாக !
                                 
படம்  கூகுள் 

Monday, 31 August 2015

மாறாத பழக்கம்

இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்களுக்கு பழைய கதை ஏதும் ஞாபகத்திற்கு வருதா !வரலையா !சரி ! பரவாயில்லை ! நானே சொல்றேன் ! ஒரு முனிவர் 
 ஆற்றில்  நீராடச் சென்றார் ! அப்போது தன் கையில்  உள்ள கமண்டலத்தை  ஆற்று மணலில் வைத்து  அடையாளம் தெரிவதற்காக  மணலை குவித்து  மூடி வைத்து விட்டு குளிக்க சென்றார் ! முனிவர் குளித்து  விட்டு திரும்பி வந்து பார்த்தால் ஆற்று மணல்  பரப்பு முழுவதும் மணல் குவியலாக தெரிந்தது ! இவர் கமண்டலம் எது என்று கண்டு பிடிக்க முடியவில்லை ! காரணம் ஆற்றில் குளிக்க வந்த அனைவரும் தாம் கொண்டு வந்த பொருளை  மணலால் மூடி வைப்பதுதான்  ஐதீகம் என்று எண்ணி   எல்லோரும்  மணலால்  மூடி வைத்து விட்டு குளிக்க சென்றனர் ! ஒருவாறு முனிவர் தனது கமண்டலத்தை கண்டுபிடித்து எடுத்துக்கொண்டார் ! மனிதர்களின்  அறியாமையை ,மூட நம்பிக்கையை எண்ணி வருத்தமுற்றார் !
அந்த காலத்தில் இருந்தே நம்மிடம் ஒரு பழக்கம் இருந்து வருகிறது ! ஒருவர் பழக்கடை  வைத்து லாபம்  பார்த்தால் பல பேர் பழக்கடையாக  வைப்பார்கள் !
 சுவீட் ஸ்டால் வைத்து ஒருவர் நன்றாக ஓடினால் பலரும் சுவீட் ஸ்டாலாக வைப்பது வழக்கம் ! வேறு வியாபாரம் செய்து சம்பாதிப்பது என்ற எண்ணமே  வருவதில்லை !
  என் நண்பர் ஒருவர் ரொம்ப சுத்தம் பார்ப்பார் ! காபி கடைக்குப்  போனால் எல்லோரும் தம்ளரில் எச்சில் பண்ணி குடிக்கிறார்கள் என்று இவர் வட்டகையில் காபி குடிப்பார் ! ஒருநாள் இவர் வட்டகையில் காபி குடித்து விட்டு பார்த்தால் எல்லோருமே  வட்டகையில் காபி குடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார் !இந்த ஜனங்களை மாற்றவே முடியாது என்று எண்ணி தலையில் அடித்துக் கொண்டார் !
                                                             
 உலகில் மாறாதது மாற்றம் ஓன்று மட்டுமே ! அதிலும் நம் ஜனங்கள் அடுத்தவர்களை பார்த்து காப்பி அடிக்கும் பழக்கம் என்றுமே  மாறாது !
                                                                                                                       
                       
                                                             

Friday, 14 August 2015

சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் !



 அந்த காலத்துல  எல்லா கிராமத்திலும் ஒரு கால் நடை பவுண்டு இருந்தது           அந்த கிராமத்திலும்  ஒரு  பவுண்டு இருந்தது ! அதுல ரொம்ப  நாளா ஆடு  மாடு அடைக்காததால  பவுண்டில புல்லு ஆளுயுரதிற்கு  வளர்ந்து நின்னுது ! இதை ஒருத்தன் பார்த்தான் ! அவனுக்கு தன் வீட்டுல  வளருத இருபது  ஆடுகளும் நினைவுக்கு  வந்தது !கூடவே  ஏழரையும் கூடவே சேர்ந்து  வந்தது !கிராம  அதிகாரிகிட்ட போயி ஐயா! பவுண்டில  புல்லு ஆளுயரத்திக்கு வளர்ந்து நிக்குது ! பூச்சி கட்ட அடைஞ்சிரக்கூடாது ! நான் என் ஆடுகள மேய விட்டுரதேன் !இடம்  சுத்தமாயிரும்ன்னான்!கிராம  அதிகாரியும்  பார்த்தாரு !சரி! இடமாவது  சுத்தமாகட்டும்னு சொல்லி சாவியை கொடுத்தாரு !மேச்சுட்டு உடனே சாவியை கொண்டுவரனும்னு சொன்னாரு !இன்னொன்னும் சொன்னாரு !அதான்  ரொம்ப  முக்கியம் !ஆட்டை மேய விட்டுட்டு எங்கேயும் போயிராேத ! அங்கேயே இருக்கணும்ன்னாரு!
                                         
                                             
        இவனுக்குதான்  ஏழரைை புடதியில  நின்னு ஆடுதானே ! இவன் என்ன செய்வான் ! இருபது ஆட்டையும் மேய விட்டுட்டு அங்கேயே நிக்காம  கதவ பூட்டிட்டு டீ குடிக்க போயிட்டான் ! அந்த  நேரம் பாக்கவா மேலதிகாரி வரணும் ? எந்த  ஊருக்கோ போயிட்டு வரும் பொது வர்ற வழியில இந்த பவுன்ட பார்த்தாரு ! உடனே  கிராம அதிகாரி ஆபிசுக்கு போய்  பவுண்டு கணக்கபார்த்தாரு !கணக்குல ஒன்னும்  பதியல ! இருபது  ஆட்டையும் பதிய சொன்னாரு ! கிராம  அதிகாரி விசயத்த சொல்லி பார்த்தாரு ! மேலதிகாரி கேக்கல !கிராம அதிகாரி கணக்குல  பதிஞ்சிட்டாரு!
                                                     


டீ குடிச்சிட்டு பவுண்டுக்கு வந்தவன் பதறி போயிட்டான் !காவலுக்கு ரெண்டு பேரு  நிக்காங்க!என்னையான்னு  விஷயத்தை கேட்டான் ! ஆபிசுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க ! அங்க போய்தான் விஷயம் புரிஞ்சது !குய்யோ  முறையோனு முறையிட்டு  பார்த்தான் ! ஒன்னும்  நடக்கல !
  பவுண்டு கதவ பூட்டிட்டு டீ குடிக்க போனதால வந்த வினை ! ஒரு  ஆட்டை விலை  பேசி இருபது ஆட்டுக்குள்ள அபராதத்தை  கட்டிட்டு ஆடுகள  பத்திட்டு  போனான் !
காட்டுக்கு பத்திக்கிட்டு போயிருந்தா ஒரு  செலவும்  வந்திருக்காது ! பவுண்டுல மேய  விட்டுட்டு கதவ திறந்து வச்சு நின்னுருந்தா மேலதிகாரி விஷயத்தை கேட்டுட்டு போயிருப்பாரு !இப்ப  இத்துனூண்டு இடத்தில இருபது  ஆட்டை மேச்சுட்டு ஒரு  ஆட்டை பறி  கொடுத்ததுதான் மிச்சம் !  அதான் சொல்றது  சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி  முக்கால் பணம்னு
                                                 
!

Sunday, 9 August 2015

தாம்பூலம் தரித்தல்

  வெற்றிலை  போடுவது  ஒரு தனி  கலைங்க! அதை  தாம்பூலம் தரித்தல் என்றும் சொல்லுவாங்க  ! இரண்டிற்கும் என்ன வேறுபாடுனா ? சில வெற்றிலைகளை எடுத்து காம்புகளை கிள்ளி பாக்கும் சுண்ணாம்பும் வைத்து  வாயில் போட்டு அரைத்து தின்றால்அதை வெற்றிலை  போடுதல் என்று கூறலாம் !     அதையே கலை நயத்தோடு  இளம் தளிர் வெற்றிலைகளை  எடுத்து அதன்  காம்புகளைகிள்ளி போட்டு  நரம்புகளை நீக்கி வாசனை  சுண்ணாம்பு தடவி ,சிறிது  கொட்டை பாக்கு வைத்து அதனுடன்
சம அளவில் ஏலக்காய்,கிராம்பு ,வால்மிளகு ,சாதிக்காய்கொஞ்சம் தேங்காய் பூ  ,இவைகளை கலந்து நீளவாட்டில்  மடித்து பின்பு அகல வாட்டில் சுருட்டி வாயில் போட்டு அப்படியே  மென்றால் அப்பா !வாய் எப்படி மணக்கும் தெரியுமா !அதைத்தாங்க  தாம்பூலம் தரித்தல் என்று கூறலாம்!
                                             
   

  அந்த சாறு வயிற்றுக்குள் போகும்போது    குரல்வளத்ததைக்கொடுக்கும்! ஜீரண சக்தியை அதிகரிக்கும் !, வயிற்றில் தங்கி உள்ள வாயுதொந்திரவுகளை வெளியேற்றி   வயிற்றை பிரியாக வைக்கும் ! வயிறு பிரச்சினை  இல்லாமல் இருந்தால் கோபம் வராது !சல்லுசல்லுன்னு யார் மேலேயும் விழ மாட்டோம் !கோபம் குறைந்தால் சண்டை வராது ! சுண்ணாம்பு சத்து பற்களுக்கும் எலும்புகளுக்கும் பலத்தை கொடுக்கிறது !பாக்கு பித்தத்தை குறைக்கிறது !அது போல ஏலக்காய் கிராம்பு போன்றவைகள் ஒவ்வொன்றும்   ஒவ்வொரு மருத்துவ குணம் கொண்டவை ! உடலுக்கு நன்மைகள் தருபவை !
       இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் அதை பயன் படுத்துபவரை பொறுத்து சில தீமைகளும் உண்டு !என் உறவினர் ஒருவர்  வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு இவற்றுடன் புகையிலை சேர்த்து போடுவார் !அந்த காலத்தில்  அங்கு விலாஸ் புகையிலை சிவகிரி புகையிலை என்று பல வகைகள் உண்டு ! என் உறவினர் அங்கு விலாஸ் புகையிலை உபயோகிப்பார் !சில சமயம் அதற்கு டிமாண்டும் உண்டு !அப்போது முன் கூட்டியே மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்வார் ! இவருடன் வெற்றிலை போடுவதற்கு என்றே ஒரு கூட்டம் உண்டு ! காலையிலேயே அவர் வீட்டுக்கு ஆறு ஏழு பேர் வருவார்கள் !
 அவர்களுக்கு காப்பி கொடுத்து பின்பு வெற்றிலை போட்டு ஊர் கதைகள் பேசி கலைந்து செல்வார்கள் ! இது வாடிக்கை! இவர் அதிகமாக புகையிலையை உபயோகித்து அதை ஒரு கை பார்த்ததால் புகையிலை இவர் பற்களை ஒரு கை பார்த்து விட்டது ! !புகையிலையில்  உள்ள சேர்மானங்கள் அவரின் 55 வயதிலேயே அவர் பற்களை ஒவ்வொன்றாக வாயிலிருந்து வெளியேற்றி விட்டன !அந்த  காலத்தில் பல் கட்டும் வசதி இல்லை !எனவே கடைசி வரை பொக்கை வாயாகவே இருந்தார் ! அவர் பேசினால் என்னேவென்றே புரியாது !புஸ் புஸ்ஸென்று காத்துதான் வரும் !அவர் மனைவிக்கு ரொம்ப சந்தோசம் ! ! தொன தொன வென்று நச்சரிக்க முடியாது அல்லவா ! ஆனால் அவர்தான் பாவம் மிகவும் சங்கடப்பட்டார் !அதை பார்த்து நாங்கள் வெற்றிலை பாக்கு பக்கம் எட்டி கூட பார்ப்பதில்லை !

                                     
 சிலர்  பீடா போடுவார்கள் ! லாகிரி  வஸ்த்துகள்  அதில் சேர்க்காமல் இருந்தால் நல்லது !
ஆனால் வெற்றிலைக்கென்று தனி மதிப்பு உண்டு !
அதனுடைய மருத்துவ குணங்கள் ஒரு புறம் இருக்க விசேச காலங்களில் வெற்றிலைக்குதான் முதல் மரியாதை !திருமண விழாக்களில்  வெற்றிலை 
பாக்குதான் முதலிடம் வகிக்கிறது !  
அதோடு விநாயகர்  ஆஞ்சநேயர் இவர்களுக்கு வெற்றிலை  மாலை சார்த்தி மகழ்வார்கள் !நன்மை  தீமை  எல்லாவற்றிலும் உண்டு ! நன்மைகளை  எடுத்துக்கொண்டு தீமைகளை விலக்கி விடுவதே நமக்கு சிறப்பு !

       
    

Saturday, 8 August 2015

ஆசையும் மீசையும்

   நான் கல்யாணம் ஆகும் வரை மீசை வைக்க வில்லை ! மீசை வளராமல்  இல்லை !அது பாட்டுக்கு உரம் போடாமலே வளர்ந்தது !மீசை வைக்கத்தான்
  பயம் ! எங்கள் குடும்பத்தில்  யாருமே மீசை வைப்பதில்லை ! மீசை வைப்பது என்னவோ பெரிய  அபசாரம் போல நினைத்தனர் ! கல்யாணம் ஆனதும்  எனது மைத்துனர்கள் இருவரும் மீசை வைத்து இருந்ததை பார்த்து  எனக்கும் மீசை மேல் ஆசை வந்தது ! அவர்கள் பெரிய மீசை எல்லாம் வைக்கவில்லை ! ஜெமினி கணேசன்   போல அழகான மீசை வைத்திருந்தார்கள் ! ஆனால் நான்  எப்படி வைப்பது !ஆசாரமான குடும்பம் ! என் தகப்பனாரை கண்டால் சிம்ம சொப்பனம்!  இந்த லட்சனத்தில்  மீசை மேல் ஆசை !மீசை இல்லாமல்  வாழ்க்கை  இல்லை என்ற நினைப்பு ! பல  நாள்  தூக்கமில்லை !சாப்பாட்டின் மேல் வெறுப்பு ! யாரை கண்டாலும்  கோபம் ! பல நாள் யோசனைக்கு பிறகு எப்படியும் மீசை வைத்து விடுவது ! என்ன வந்தாலும் எதிர் கொள்வோம் என்ற நிலை எடுத்தேன் ! இதற்காக பல நாள் ஷேவ் செய்யாமல் தாடி  வளர்த்தேன் ! தாடி என்றால் முள்ளு முள்ளாக தாடையில் இருக்கும்! அவ்வளவுதான்! குறைந்த வயசு தானே ! அந்த அளவுக்குத்தான் வளர்ந்தது ! பின்பு  தடையில் உள்ள முடியை ஷேவ் செய்து விட்டு மீசையை அப்படியே விட்டு விட்டேன் !
குற்றவாளி  அரசன் முன்பு நிற்பதை போல என் தகப்பனார் முன்பு போய் நின்றேன் ! சத்தம் போடுவாரா  எசுவாரா என்ற பயம் ஒரு புறம் !எது வந்தாலும் மீசையை விட்டு கொடுக்க கூடாது என்ற மனம் ஒரு புறம் ! என் தகப்பனார் ஏறிட்டு பார்த்து விட்டு தலையை  குனிந்து கொண்டார் !இது எனக்கு மேலும் தர்ம சங்கடத்தை உண்டாக்கியது !மீசையை  பார்த்தாரா பார்க்கவில்லையா ?
பார்த்தால் ஏன் ஒன்றும் சொல்லவில்லை ? இல்லையெனில் திரும்ப எப்படி பார்க்க வைப்பது ! இரண்டு மூன்று நாட்கள் இப்படியே கழிந்தது !சத்தமும் இல்லை யுத்தமும் இல்லை ! தைரியமாக மீசையை வைத்து விட்டேன் !
பையன் துணிந்து விட்டான் ! அவன் மைத்துனர்களும் வைத்திருக்கிறார்கள் ! எனவே மீசை வைப்பதை எதிர்த்து நம் மரியாதையை கெடுத்துக்கொள்ள  வேண்டாம் என்று என் தகப்பனார் நினைத்து இருக்கலாம் ! என் தகப்பனார் இறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன !இப்போது அவரின் கண்டிப்பையும்  கனிவையும் நினைத்து வியக்கிறேன் !
     எனது உறவினர் ஒருவர் அரசு துறையில்  வேலை  பார்த்தார் ! இவரோ உயரம் கட்டை !பதவியோ பெரிது !எப்படி  சமாளிப்பது என்று யோசித்தார் !பெரிய மீசையாக வைத்துவிட்டார் ! மீசையை வளைத்து கிருதாவோடு இணைத்து விட்டார் ! முகமே  வேறு மாதிரி  ஆகி விட்டது ! மிகவும்  கோபக்காரர் போலவும்  எதற்கும்  பயப்படாதவர் போலவும் ஒரு தோற்றத்தை கொடுத்து விட்டது !எவரும் இவரிடம் நெருங்கவே  பயப்பட்டனர் ! இப்படியே  காலத்தை  ஓட்டி ஓய்வும் பெற்று விட்டார் ! ஒய்வு பெற்ற மறு நாளே  மீசையை குறைத்து விட்டார் !ஏனெனில் பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ண வேண்டும் ! சம்பந்தகாரர்கள் பயந்துபோய் ஓடி விடக்கூடாது அல்லவா!
   தன் குழந்தையை  கொஞ்சும் போது மீசை குத்தக்கூடாது என்று மீசையை எடுத்து விடுவோரும் உண்டு !குழந்தை அழுதால் அதை கொஞ்ச வேண்டாம் என்று  மீசையை பெரிதாக நினைப்போரும்  உண்டு ! எப்படியாயினும்  சேவலுக்கு கொண்டை  அழகு போல ஆண்களுக்கு  மீசை அழகுதான் !
                                                 
 
                                                     

Friday, 7 August 2015

சில திருமணங்களில் சில அனுபவங்கள் !



                                                                 படம் கூகிள்   
திருமணவிழாக்களுக்கு  செல்லும்போது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவகையான அனுபவங்கள் நமக்கு கிடைக்கின்றன !என்நண்பர் ஒருவருக்கு நடை பெற்ற திருமணம் ஒன்றிற்கு  சென்றிருந்தேன் ! அதுஒரு கிராமத்தில் நடை பெற்றது ! அங்கு மதிய சாப்பாடு போட  இரண்டு  மணி  ஆகிவிட்டதுஅவ்வளவு பேருக்கும்  நல்ல பசி ! அதோடு நல்ல வெயில்  நேரம் ! இலை போட்டு சாப்பாடு பரிமாறியவுடன் எல்லோரும் அவசர அவசர மாக சாப்பிட ஆரம்பித்தனர்!  அவ்வளவுதான் எல்லோருக்கும் விக்கல் வந்துவிட்டது !அனைவரும் தண்ணீர்  தண்ணீர் என்று தவிக்க, தண்ணீர் வந்தபாடில்லை !காரணம் டம்ளர் இல்லை !ஐந்து டம்ளரை வைத்துக்கொண்டு ஒவ்வொருத்தருக்காக ஊற்றி கொடுத்து கொண்டிருந்தனர் ! பாதி பேருக்கு விக்கலில்  கண்ணீர் வந்து விட்டது ! தண்ணீர் கொடுத்தவரிடம் சொம்பை  பிடுங்கி சிலர் குடித்து விட்டனர் ! சிலருக்கு அதுவும் கிடைக்காமல் போய் விட்டது!இது ஒரு அனுபவம் !
படம்   கூகிள்
    இன்னொரு திருமண  விழா அனுபவம் வேறு மாதிரியாக இருந்தது ! மாப்பிள்ளையின் தகப்பனாரும் தாயாரும் நேரில் வந்து அழைத்தார்கள் !கட்டாயம் வர வேண்டும் என்று வற்புறுத்தி கூப்பிட்டார்கள் !அதனால் நானும் மனைவியும்  சென்றோம்! மூன்று மணி  நேரம் பஸ் பயணம்! பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆட்டோவில் திருமண மண்டபம் சென்றோம் ! அங்கு வரவேற்க  நாதி இல்லை ! உள்ளே சென்றால்  சாப்பிட சொல்ல ஆளில்லை !
நானாக மாப்பிள்ளையின் அப்பாவை கண்டு பிடித்து வணக்கம் சொன்னேன் ! அவர் வரவேற்க  வேண்டியதிருக்க நான் அவரை வரவேற்றேன் !அவர் பதிலுக்கு வாங்க என்று கூறி விட்டு  அவர் வேலையில் பிசி ஆகி விட்டார் !  வீடு தேடி வந்து  அழைக்கிறார்கள் ! அதனால் பலர் வெகு தூரத்தில் இருந்து பஸ்ஸில்  உட்கார இடம் கிடைக்காமல் நின்று கொண்டு வந்திருப்பார்கள் !இப்படி பலர்  பல கஷ்டங்களுகக்கு உள்பட்டு வந்திருப்பார்கள் ! இவர்களை  முகப்பில் நின்று முக மகிழ்வுடன் வரவேற்றால் வந்தவர்களுக்கு பயணத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் பறந்து போகும் !பலருக்கு இது தெரிவதில்லை ! 
                                               



Friday, 24 July 2015

பொய்யும் பொய்யும் சேர்ந்தால் நன்மை என்று அர்த்தம் !

               
படம் கூகுள் 
  நான் வருவாய் துறையில் பணி புரிந்த சமயம்! தமிழ்நாடு  சர்வீஸ் கமிசன் பரீட்சை அடிக்கடி  நடக்கும் ! அதற்கு  பள்ளிகூடங்களில் இடம் வாங்க வேண்டும் ! அந்த காலத்தில் ஒரு நபர் பரீட்சை எழுதுவதற்கு பள்ளிக்கூடத்திற்கு  ஐம்பது பைசா சர்வீஸ் கமிசனில் இருந்து கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்  !
    500 பேர் எழுதினாலும்   250 ரூபாய்தான் கிடைக்கும் ! அதனால் ஸ்கூல் காரர்கள் விரும்ப மாட்டார்கள்  ! பெஞ்சுகளை ஒழுங்கு படுத்தி போட வேண்டும் ! பரீட்சை எழுத வருவதற்கு முன் திறந்து வைக்க வேண்டும் ! அவர்கள் எழுதி முடித்து போகும் வரை காத்திருக்க வேண்டும் !குடி நீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் !இதெல்லாம் முடிந்தபின் திரும்பவும் பென்ச் டெஸ்க் இவைகளை ஒழுங்கு படுத்த வேண்டும் ! இதனால் ஸ்கூலில்  இடம் தர மாட்டார்கள் !ஆனால்  அதிகாரிகள்  எங்களை  விட மாட்டார்கள் !எப்படியாவது வாங்கி வர வேண்டும் என்று உத்தரவு போட்டு விடுவார்கள் ! நாங்கள்  மத்தளம் மாதிரி  இரண்டு  பக்கமும்  அடி வாங்க வேண்டும் !
  கம்பும் ஒடியக்கூடாது பாம்பும்  சாகனும் !சண்டையும் போடக்கூடாது ! சீட்டும்  வாங்கணும் !கயிறு மேல் நடக்கும்  வித்தை மாதிரித்தான் ! நாங்க  சர்க்கஸில் வேலைக்கு  போனால் உடனே  எடுத்துக்குவாங்க ! அவ்வளவு  வேலையும் தெரியும் ! தெரியலையின்னா  வேலை பாக்க முடியாது !
                             
                                         படங்கள் கூகுள் 
           ஆபிசுக்கு பக்கத்திலுள்ள ஸ்கூல்ல  போய்  சீட்  கேக்க போனோம் !சாயந்திர நேரம் !  HM  ஆபிஸ் முன்  நாலைந்து பேர் நின்று  பெசிக்கொண்டு இருந்தனர் ! HM  இருக்காங்களா? என்று  கேட்டோம் ! நாங்க எதற்கு வந்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொண்டார்கள்  போலும் ! பாம்பின்  கால் பாம்பறியாதா  என்ன?   ஊருக்கு போயிருக்காங்க ! வர ரெண்டு  நாளாகும்  என்றனர் !சரி வந்தவுடன் பார்க்க வருகிறோம் என்று சொல்லி திரும்பினோம்!    எங்களுடன் வந்த ஒருவர் HM  அவர்களுடன்  நிற்கிறார்! உங்களிடம் பொய் சொல்லுகிறார்கள்  என்றார் ! 
  அவர்கள் நம்மிடம்பொய் சொல்லுகிறார்கள் !இனி நாம் வேற ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டியதுதான்  என்று நினைத்து  திரும்ப அவர்களிடம்  " சார்  விஷயம் வேறொன்றுமில்லை !  உங்க  பள்ளிகூட   காம்பவுண்டு  சுவர்  புறம்போக்கில் இருப்பதாக புகார் வந்திருக்கு ! நாளை அதை  அளந்து பாக்க சர்வேயர்  வாரார் !அதை சொல்லிட்டு போகத்தான்  வந்தோம்!'  என்று சொல்லிவிட்டு திரும்பினோம் ! அதற்குள் அவர்கள் நிலவரம் கலவரமாகி விட்டது ! சார் சார் என்று பின்னாலேயே வந்தார்கள் ! சார் எங்களை மன்னிச்சுடுங்க ! நீங்க யாரென்று  தெரியாம பொய் சொல்லிட்டோம் ! இவர்தான் HM !  காம்பவுண்டு சுவர அளந்தா பள்ளிக்கூடம் பேர் கெட்டுடும் ! பிள்ளைகள்  வராது !தயவு செஞ்சு அதை நிப்பாட்டுங்க என்றனர் !  
  சார்! நீங்க சர்க்காரை மதிச்சா சர்க்கார் உங்களை மதிக்கும் என்றேன் !
  உடனே  நாற்காலி  கொண்டு வந்து போட்டு உக்கார சொன்னாங்க ! உங்களுக்கு என்ன உதவி செய்யணும் சொல்லுங்க செய்யுறோம் ! என்றனர் !
 பப்ளிக் சர்விஸ் கமிசன் பரீட்சை எழுத 500  பேருக்கு  அனுமதி வேண்டும் என்றோம் !
  உடனே எழுதி கையெழுத்து போட்டு சீல் வைத்து கொடுத்து விட்டனர் ! 150 பேருக்கு கிடைக்குமா என்று கவலையோடு போன எங்களுக்கு 500  பேருக்கு 
சீட் கிடைக்க  காரணம் அவங்க சொன்ன பொய்யும் நாங்க சொன்ன பொய்யும் தான்  !
 வள்ளுவர் சொன்னது போல  நாங்கள் சொன்ன  பொய்யும் இந்த இடத்தில வாய்மைதான் !யாருக்கும்  கெடுதல் இல்லை !பல  மாணவர்களுக்கு பரீட்சை எழுதும் நன்மை கிடைத்தது ! வாழ்க சமயோசிதம் !
                                                       
  

Wednesday, 22 July 2015

ரெவினியூ ரெக்கவரி

             
   நான் கிராம நிர்வாக அதிகாரியாக பல  ஆண்டுகளுக்கு  முன்பு பணி புரிந்தேன் ! பல வரிகளுடன் ரெவின்யூ ரெக்கவரி என்று, அதாவது  அரசாங்கத்துக்கு வர வேண்டிய பாக்கிகளையும்  அரசாங்க துறைகளில் இருந்து மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கிகளையும் வசூல் செய்ய வேண்டும்! .இதில் பொதுப்பணி துறை ஒன்றிலிருந்து ஒரு ஏழை பெண்ணுக்கு மொத்தமாக ஒரு தொகை     வர வேண்டும் என்றும்  அது  பல மாத காலமாக கொடுக்க படவில்லை என்றும்  தெரிய வந்தது !
       நான் அந்த பெண்ணை  அழைத்து விசாரித்தேன் ! அவளின் கணவர் கூலி தொழிலாளியாக வேலை  பார்த்தார் என்றும் கல் உடைக்க வெடி வைக்கும்  போது ஒரு பெரிய கல் அவர் தலையில்  விழுந்து அவர் இறந்து விட்டார் என்றும் தெரிந்தது !அதற்கு நஷ்ட ஈடாக அந்த துறையில் இருந்து  அவர் மனைவிக்கு மொத்தமாக ஒரு தொகை  சாங்ஷன் ஆகி இருப்பதாக தெரிய வந்தது ! இதற்குத்தான் அவள் அலைந்து கொண்டிருக்கிறாள்  .கடைசியாக ரெவின்யூ ரெக்கவரியாக என் கைக்கு வந்து சேர்ந்தது !
      அந்த பெண்ணுக்கு இரண்டு  பெண் குழந்தைகள்!சின்ன குழந்தைகள் ! .சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது அவளால்  எங்கே படிக்க வைக்க முடியும்?  அந்த பெண்ணிடம் பத்து நாட்களில் அந்த பணம் கிடைக்க  ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி அனுப்பி வைத்தேன் ! எனக்கு ஒரே கவலை ! அரசாங்க துறை சம்பந்த பட்டது! வசூல் செய்வது மிகவும் கஷ்டம் ! கல்லில் நார்  உறிக்கும் கதைதான் ! மன உளச்சலி்ல் இருந்தேன் ! திடிரென்று ஒரு யோசனை  தோன்றியது ! நேரே தாசில்தாரிடம் சென்று "சார் அந்த பெண் வறுமையில் வாடிக்கொண்டு இருக்கிறாள் .அவளது இரண்டு சிறு பெண்களும் சாப்பாட்டுக்கே வழி இன்றி படிக்க வைக்கவும் முடியாமல் கஷ்டபடுகிறார்கள் ! தலையில் எண்ணை வைத்தே  பல  மாதங்கள்  ஆகி இருக்கும் போல தெரிகிறது அதனால் நான் ஒரு யோசனை செய்திருக்கிறேன் ! அதை உங்களிடம் கூறி  அனுமதி கேட்க வந்தேன்" என்று அவரிடம் அந்த யோசனையை  சொன்னேன்!
     
ஏழைக்கு உதவி செய்வது பெரும் புண்ணியம் ! நீங்கள்  தாராளமாக செய்யுங்கள் !நான் வேண்டிய உதவி செய்கிறேன் என்று கூறினார்
  அடுத்த மாதம் ஒன்றாம் தேதி நானும் என் நண்பர்களான கிராம நிர்வாக  அதிகாரிகள் சிலரும் எங்களிடம் வேலை பார்க்கும் தலையாரிகளும்  அந்த அலுவலகத்துக்கு சென்றோம் ! அன்று ஒன்றாம் தேதி! ஆகையால் சம்பளம்  வாங்க எல்லோரும் ஆஜராகி இருந்தனர் !
 எங்களை கண்டதும் என்ன சார் கூட்டமாக வந்திருக்கிறீர்கள்?  என்று அசட்டையாக கேட்டனர் !  "ஒரு ஏழை பெண்ணுக்கு உங்கள் அலுவலகத்தில் இருந்து நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் ! பல மாதங்களாக அலைந்து கொண்டிருக்கிறாள் ! அதை வசூல் செய்ய வந்திருக்கிறோம்" என்று நான் சொன்னேன் ! அவர் "சார் நாங்கள் எழுதி அனுப்பி இருக்கிறோம் !வந்ததும் கொடுத்து விடுவோம்! அதற்கு சில மாதங்கள் ஆகும்" என்றார் !
  நான் உடனே "சார் உங்கள் அலுவலகத்தை ஜப்தி  செய்யும்படி உத்தரவு வந்திருக்கறது ! பின்னால் லாரிகள் வருகின்றன ! பத்திரிகைக் காரர்களும் வருகிறார்கள் !இன்று மாலை பேப்பர்களில்  உங்கள் அலுவலகம் ஜப்தி செய்த செய்தி வரும்" என்றேன் ! 
அவ்வளவுதான்! அசால்டாக இருந்த அனைவரும் அலார்ட்டானார்கள் ! அப்பொழுது  மொபைல் வரவில்லை ! எனவே தொலை பேசியில் செய்திகள் பறந்தன ! சிறிதுநேரத்திற்குள் சர் சர்ரென்று ஜீப்புகள் பறந்து வந்தன ! எல்லோரும் உள்ளே போய் ஆலோசனை செய்தனர் ! பின்பு என்னை கூப்பிட்டு பத்து நாள்  டைம் கொடுக்க முடியுமா என்று கேட்டனர் !  அதற்கு நான் சார் எங்கள் நிலை உங்களுக்கு தெரியாததில்லை ! ஒன்று வசூல் செய்ய வேண்டும்! இல்லை என்றால் ஜப்தி செய்ய வேண்டும்! என்ற நிலையில்  நாங்கள் இருக்கிறோம் என்றேன் ! மறுபடியும் உள்ளே போய் ஆலோசனை செய்தார்கள் ! யார் யாருக்கெல்லாமோ  டோஸ்கள் விழுந்தன !
                                                       
  திரும்பவும் என்னை கூப்பிட்டு  "சார் இந்த விஷயம்  இதுவரை  எங்கள்  கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை ! எப்படியாயினும்  இன்று  மாலை ஐந்து மணிக்கு செக்  கொடுத்து விடுகிறோம்" என்றனர் ! ரொம்ப தேங்க்ஸ் சார் என்று கூறி விட்டு தாசில்தாரிடம் விபரத்தை சொன்னேன்!அந்த பெண்ணையும் பிள்ளைகளோடு வரச்சொல்லி தகவல் கொடுத்தேன் !
   மாலை ஐந்து மணிக்கு எல்லோரும் அந்த அலுவலகம் சென்றோம் ! முதன்மை அதிகாரி செக்கை தாசில்தாரிடம் கொடுக்க அவர் அதை அந்த பெண்ணிடம் கொடுத்தார் ! அந்த பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கும் படி கூறி வாழ்த்தினோம் !
                                                 
 பல வருடங்களுக்கு பிறகு அந்த இரண்டு பெண்களையும் ஒரு விழா நிகழ்ச்சியில்  சந்திக்க நேர்ந்தது !இரண்டு பேரும்  நன்றாக படித்து பெரிய பதவிகளில் இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் !
                                                   
                                                 

Tuesday, 21 July 2015

சாமி சைவமா ,அசைவமா !

படம் கூகுள் 

         எங்கள் ஊரில்   கருப்பசாமி கோயிலில்  பல  ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் ! ஆண்டு  தோறும் அந்த கோயிலில் இரண்டு  நாட்கள் கொடை விழா நடக்கும் !சுத்து பட்டு ஊர்களில் இருந்து ஆணும் பெண்ணும் குவிந்து  விடுவார்கள் ! முதல் நாள் தீர்த்த வாரி நடக்கும் ! இரண்டாவது  நாள் ஆட்டம் பாட்டம் ஆடுகள் பலி கொடுத்து  வேண்டுதலை நிறைவேற்றும் நிகழ்ச்சி என நடக்கும் !
   வில்லு பாட்டுகாரர்கள்  ஒருபக்கம் கருப்பசாமி கதையை சொல்லிக்கொண்டு இருந்தார்கள்!
                             

          மற்றொரு பக்கம் நையாண்டி மேளத்தை வாசித்துக் கொண்டிருந்தார்கள் ! ஓன்று கம்பு ஒடியனும்  இல்ல தவுலு கிழியனும் என்று ஆக்ரோசமாக அடித்து துவைத்து கொண்டிருந்தார்கள்! நாதஸ்வரக்காரர்களும், தன் பங்குக்கு குலுக்கள்  டான்ஸ்  பாட்டுக்களாக  வாசித்து ஜனங்களின் காது ஜவ்வை கிழத்துக் கொண்டிருந்தார்கள்! இதற்கெல்லாம்  ஈடு கொடுத்து கரகாட்டக் காரிகள் ஆடிக்கொண்டிருந்தர்கள் ! அவர்களை சுற்றி  இளைஞா்கள் கூட்டம் !\
கரகாட்டக்காரிகளின் ஜாக்கெட்டில் ரூபாய் நோட்டுக்களை குத்துவதில்  இளைஞர்களிடையே போட்டா போட்டி நடந்து கொண்டிருந்தது

                               

படம் கூகுள்  
        இதற்கு இடையே கூட்டத்தையும் சத்தத்தையும்  கேட்டு  ஆடுகள் எல்லாம் மிரண்டு போய்  மே  மே  என்று கத்திக் கொண்டிருந்தன ! எல்லாம் முடிந்து  ஆடுகள் வெட்டும் நிகழ்ச்சி தொடங்கியது ! பூசாரி  அரிவாளை ஓங்கி பிடித்து கொண்டிருந்தார் !அவர் வெட்டும்போது  ஒரே வெட்டில் ஆட்டின்  தலை துண்டாக  விழ  வேண்டும் ! அப்படி  ஆட்டின்  தலை துண்டாக போய் விழாமல் தொங்கி கொண்டிருந்தால் ஆட்டின் சொந்தக்காரர் குடும்பத்திற்கு கஷ்டம் வரும் என்று ஐதீகம்! அதனால்  பூசாரி கனத்த அரிவாளை நன்றாக கூர் தீட்டி  வைத்திருந்தார் !
                                                
படம் கூகுள் 
           பூசாரி அரிவாளை சாமி  முன் வைத்து கும்பிட்டு  ஆடுகளை வெட்டுவதற்கு தயாராக  அரிவாளை  ஓங்கியபடி நின்று கொண்டிருந்தார் ! ஒவ்வொருவரும் தங்கள்  ஆட்டை  கையில் பிடித்தபடி  நின்று கொண்டிருந்தார்கள் ! பூசாரி முன்பு  இரண்டு  ஊர்  தலைவர்கள் தங்கள்  ஆட்டைத்தான்  முதலில்  வெட்ட வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி கொண்டிருந்தார்கள் !ஒருவர் தன்  ஊரில்தான் தலைக்கட்டு அதிகம்! அதனால் தன்  ஆட்டைத்தான்   முதலில் வெட்ட  வேண்டும்  என்றார் !அடுத்தவர் தன் ஊர்தான் ஆதி காலம்  முதலே  இந்த  கோயிலுக்கு  வருகிறவர்கள் ! எனவே  தங்கள்  ஊர்தான்  பரம்பரையில்  மூத்தவர்கள் !எனவே தன் ஆட்டைத்தான்  முதலில் வெட்ட வேண்டும் என்றார் ! முதலில் ஒருவர்  தன்  ஆட்டை நீட்டுவார் !பூசாரி  அரிவாளை  ஓங்கும்போது இவர்  ஆட்டை தள்ளி விட்டு தன் ஆட்டை நீட்டுவார் ! இப்படியே  இருவருக்குள்ளும்  இழுபறி போட்டி  நடந்து கொண்டிருந்தது ! பூசாரி  அரிவாளை  ஓங்குவதும் இவர்கள்  தள்ளு முள்ளை  பார்த்து நிறுத்துவதுமாக  நேரம்  ஓடிக்கொண்டு இருந்தது ! பூசாரிக்கு  அருள்  கூடிக்கொண்டே இருந்தது! கண்கள் செவ்வசெவேரென மாறி விட்டன ! இறுதியில் அவர் ஒரு  முடிவெடுத்தார் ! அரிவாளை ஓங்கி வெட்டுவோம் !யார் ஆடு  வெட்டு  பட்டாலும் சரி !
        அதே  போல  அரிவாளை எட்டு மட்டும் உயர்த்தி ஒரே வெட்டாக வெட்டிவிட்டார் ! 
\  கீழே  உருண்டு ஓடுயது  மனிதனின் தலை !தலைக்கட்டு  அதிகம்னு சொன்னாரே அவர்   தலை!  போட்டியில் நீட்டுபோது  ஆட்டின்  தலைக்கு  மேலாக தன்  தலையையும் சேர்த்து  நீட்டி  விட்டார் !
     அவ்வளவு தான்! பூசாரி இந்த  பூலோகத்தை விட்டே  மறைந்து விட்டார்!  அவர் எப்படி  மாயமானார் என்று யாராலும்  கண்டுபிடிக்க முடிய வில்லை !பாரம்பரிய  ஊர்க்காரர் பாரம்பரியத்தை எல்லாம்  விட்டு விட்டு  பறந்து விட்டார் !
     அங்கிருந்த போலீஸ்காரர் கதவை  மூடுங்கள் ! கதவை  மூடுங்கள் என்று  கூப்பாடு போட்டார் !அவர்  கூப்பாட்டை  கேட்டதும் மீதம் இருந்தவர்களும் ஒரு கதவை அடைத்து மறு  கதவை அடைப்பதற்குள் இடுக்கு வழியே பாய்ந்து  பறந்தனர் !  வில்லு  பாட்டுகாரர்கள் இந்த  வில்லங்கமான வில்லேஜை விட்டு  சீக்கிரம் போக வேண்டும் என்று அந்த வில்லையே ஆயுதமாக கீழே ஊன்றி காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்தனர் !குடம் அடிப்பவர் இதற்குதான்  அந்த  காலத்தில் குடம் கண்டு பிடித்திருக்கிறான் என்று எண்ணி குடத்தை கீழே வைத்து அதன் மேல் ஏறி சுவரை தாண்டி குதித்தார் !  கரகாட்டக்காரிகள்  எந்த கிரகத்துக்கோ போய் விட்டார்கள் ! நையாண்டி  மேளக்காரர் தன் நிலைமை இப்படி நையாண்டி ஆகிவிட்டதே என்று பதைத்து   ஓடி வந்து  அந்த  மேளத்தோடே சுவரை  தாண்டி  குதித்து விட்டார் ! தனக்கு இவ்வளவு பலம் இருக்கிறதா என்று அவருக்கே ஆச்சரியம் !நாதஸ்வரக்காரர் பார்த்தார் ! தான் மட்டும்  மாட்டிக்கொண்டால் தன்னை நொங்கு எடுத்து விடுவார்கள் என்று பயந்து சுவரில் ஏறுவதற்கு முயன்று கொண்டிருந்த ஒருவன் தலையை  மிதித்து ஏறி அந்த பக்கம் குதித்து விட்டார் !
     இவ்வளவு களேபரங்களும் நடந்து முடிந்து போலீஸ்காரர் மட்டும்தான் அங்கு இருந்தார் !ஈ, காக்கை கூட அந்த பக்கம் வரவில்லை !
         சில  நாட்களில் பூசாரி மற்றும் சிலரை  கைது பண்ணி விசாரித்தனர்! சில  மாதங்கள்  கேஸ் நடந்தது ! சாட்சியம் எதுவும் இல்லை என்று கூறி நீதிபதி கேசை தள்ளுபடி செய்து ஒரு உத்தரவு பிறப்பித்தார் ! இனி இது போன்ற நேரங்களில்  கூடுதல் போலிஸ் போட்டு வரிசையில் நின்று ஆட்டை வெட்ட  ஏற்பாடு செய்ய வேண்டும்  என்று !

      அதற்கு  முன்பே அந்த கோயில் நிர்வாகிகள் எல்லோரும் சேர்ந்து ஒரு தீர்மானம் போட்டு விட்டார்கள் !  ஆடு வெட்டுவது கருப்பசாமிக்கு பிடிக்க வில்லை ! அதனால்தான் மனிதனை காவு  வாங்கி விட்டார் ! இனி கருப்பசாமிக்கு பலி  கொடுக்க கூடாது என்று !
         அந்த வருடம் முதல் கருப்பசாமி  சைவமாக  மாறிவிட்டார் !
                                                                 

Thursday, 16 July 2015

பணம் வந்தாலும் பணிவும் வர வேண்டும்

 

 சும்மாவே  ஆடுபவர் அந்த கிராம முன்சீப் ! காலில் வெந்நீரும்  கொட்டினால்  எப்படி  ஆடுவார் ?  அப்படித்தான்  அன்று நடந்தது !
     அந்த  ஊரில்  சிறு   மில்லும், பெரும் நிலபுலன்களும் உள்ள பண்ணையார்     அவர்  ! மில்லை இவர் பையன்கள் பார்த்து கொள்கிறார்கள் !  இவர்  தோட்டம் துரவுகளை  பார்த்து கொள்கிறார் !கொடுக்கல்  வாங்கலும் உண்டு !வழக்கம் போல தோட்டத்தை  மேற்பார்த்து கொண்டிருந்தார் !சுமார்  நூறு  ஆணும் பெண்ணும் வேலை  பார்த்துக்  கொண்டிருந்தார்கள் ! அந்த  நேரம்  பார்க்க முன்சீப் தலையாரிகளுடன்  வசூலுக்கு வந்தார் ! பண்ணையாருக்கு   சனி  உச்சத்தில் இருந்த நேரம் போலும்  !
  தலையாரிகளில் ஒருவர் போய் பண்ணையாரிடம்   ஐயா !கிராம முன்சீப் வந்திருக்காக  என்றார் ! அவர் ஒரு புழுவை பார்ப்பது போல பார்த்து விட்டு பேசாமல் இருந்து விட்டார் !
   முன்சீப்போ மரியாதையை  விட்டுக்கொடுக்க மாட்டார் ! தன்னை பார்த்ததும்  எழுந்து நின்று வரவேற்காததோடு , தன்னை உக்காரவும் சொல்ல வில்லை ! அவருக்கு  ரத்த கொதிப்பு டாப்புல ஏற ஆரம்பிச்சது ! ஏற்கனவே கண்ணு இரண்டும் சிவப்பா இருக்கும் ! இப்போது ரொம்ப சிவப்பாயிட்டது !
 கோபமா தலையாரியை பார்த்தார் ! தலையாரி திரும்பவும் பண்ணையாரிடம் போய் ஐயா ! கிராம முன்சீப் வந்திக்காக ! என்றார் ! அப்பவும் கல்லு மாறி
  இருந்தார் ! எந்த  அசைவும் அவரிடம்  இல்லை !
    தலையாரி தானே வந்து சொல்லுகிறான் ! முன்சீப் வந்து தனக்கு வணக்கம்  போடவில்லையே என்று பண்ணையார்  எண்ணியிருக்கிறார்! பண்ணையார்  தனக்கு  வணக்கம் போடலையே என்று முன்சீப் எண்ணி இருக்கிறார் !
 இருவுக்குள்ளும் டக்கப் வார் நடந்து கொண்டிருந்தது !
   மூணாவது தடவையும் தலையாரி போய் சொன்ன போதும் பருவ  நிலை  மாற வில்லை !புயல்  அங்கேயே  மையம் கொண்டு விட்டது !
பார்த்தார்  முன்சீப் !இனி  தன் .அஸ்திரங்களுக்கு  வேலை   வந்து விட்டது என்று எண்ணினார்! தலையாரி  அந்த அரிவாளை எடு  என்றார் முன்சீப் !
பண்ணையார்  பதறி எழுந்தார் !மரியாதையை  எதிர்பார்த்து  மரணத்தை எதிர்  கொண்டு  விட்டோமோ   என்று  உள்ளூர  பயந்தார் ! அரிவாளால் போட்டு விடுவரோ  ? என்று ஓட பார்த்தார் பண்ணையார் !
 அவரை போட்டு விட்டு  ஜெயிலுக்கு போக  முன்சீப் முட்டாளா என்ன ? முன்சீப்  தலையாரியின் கையில் அரிவாளால்  ஒரு கீறு கீறினார் !ரத்தம்  சீறி வந்தது !
பண்ணையாருக்கு தன்னை வெட்டாமல் தலையாரியை  ஏன் வெட்டினார் என்று புரியவில்லை !
அடுத்ததாக முன்சிப் ஒரு வேலை செய்தார் ! தன்னிடமுள்ள ரசீது புஸ்தகத்தை கிழிப்பது போல  பாவனை செய்து ரசீது  புஸ்தகத்தின் அட்டையை இரண்டாக  கிழித்தார் !

 முன்சீப்புக்கு  புத்தி  பிசகி  விட்டதோ  என்று பண்ணையாருக்கு  சந்தேகம் வந்து  விட்டது !
  முன்சீப்பின்  ஒவ்வொரு செய்கையை பார்த்ததும்  பண்ணையாருக்கு  என்ன செய்வது  என்ன சொல்வது ஒன்றும் புரிய வில்லை !  அமாவாசை அன்று   நடு சாமத்தில்  தனியாக    மயானத்தில் நிற்பது  போல  தவித்தார் !
  மூன்றாவதாக ஒரு  பிரம்மாஸ்திரத்தை ஏவினார் முன்சீப் !

  யோவ் !பண்ணையாரே வசூல்  செய்ய வந்த என் தலையாரியை  வெட்டி இருக்கிறீர்  அதுஒரு குற்றம் ! சர்க்கார் வேலையை  செய்ய விடாமல் தடுத்து விட்டீர் ! ரசீது புஸ்தகத்தையும் கிழித்து விட்டீர்! அடுத்ததாக நான் வசூல் செய்து வைத்திருந்த சர்க்கார் பணத்தையும்  புடுங்கி கொள்ளைஅடித்து விட்டீர் !   இந்த நான்கு    குற்றங்களுக்கும்  என்ன தண்டனை தெரியுமா ?    ஏழு வருஷம்  ஜெயில் தண்டனை! உம்மை ஜெயிலை  தள்ளலை  என்றால் என் வேலையை ராஜினாமா செய்து விடுகிறேன் என்றார் முன்சீப்!

  பண்ணையாருக்கு  சப்த நாடியும் ஒடுங்கி  விட்டது ! பூனைன்னு புடிக்க போய் அது புலியால்ல இருக்கு  ! எறும்பு  புற்றுன்னு கை விட அது  பாம்பு  புற்றா மாறிட்டுதே   என்று எண்ணினார் !
நா  நேரே போலீஸ்  ஸ்டேசனுக்குதான்  போறேன் ! போலீஸ்  வரும்  ரெடியா இரும் என்று சொல்லி விட்டு முன்சீப்  போய் விட்டார் !
  பண்ணையார்  நிலை  கொள்ளாமல்  தவித்தார் !இன்னைக்கு யார் முகத்தில்  விழித்தோம்  என்று  எண்ணினார் !யார் முகத்தை  சொன்னாலும்  அது வேறு சிக்கல் !
 நேரே கிராம கர்ணத்திடம்  போனார் ! நடந்ததை எல்லாம் சொன்னார் !கர்ணம் வயதில் பெரியவர் !அனுபவஸ்தர் ! பண்ணையார் வருவதற்கு முன்பே முன்சீப் கர்ணத்திடம் நடந்ததை சொல்லி விட்டார் !போலிசுக்கு  போக  வேண்டாம் !நீர் வீட்டில் இரும்  !நான் பேசிக்கொள்கிறேன் என்று கூறி அனுப்பி விட்டார் ! அது பண்ணையாருக்கு தெரியாது !
                                               
 இப்போது  பந்து கர்ணம் கைக்கு வந்து விட்டது ! போலிசுக்கு  போனா  பண்ணையாருக்கு மட்டுமல்ல  ஊருக்கே  அவமானம் ! அதே நேரத்தில் இதை  அப்படியே விட்டால் கர்ணம் முன்சீப் இருவருக்கும்  ஊரில்  மதிப்பு இருக்காது !கர்ணம் மனசுக்குள் கணக்கு போட்டார் !
 ஐயா !முன்சீப் ரொம்ப கோபமா இருக்கார் !நான்தான் அவரை போலிசுக்கு போகாமல் தடுத்து வைத்திருக்கிறேன் ! கேசுன்னு போனா ஏழு வருஷம் உள்ள போகணும் ! நீங்க செஞ்சது கடுமையான குற்றம் ! நீங்க என்ன நினைக்கீங்க ன்னு  அவரை ஆழம் பார்த்தார் !
 ஆழம் பாக்க கூடிய நிலையில் அவர் மனம் இல்லை .அது தூர்ந்து போய் விட்டது பூரண  சரண்டர்  நிலையில்  இருந்தார் !நீங்க என்ன சொன்னாலும் நா கேட்டுக்கிடுதேன் ! இனி பஞ்சாயத்து துப்பரவு  தொழிலாளி வந்தாலும் எந்திருச்சு நின்னு வரவேற்பேன் என்றார் !
அதற்கு மேலும் கர்ணம்  அவரை சங்கப்படுத்த விரும்பவில்லை !இதுவே 1 அவர்  ஆயுளுக்கும் போதும் என்று எண்ணினார் !
 அந்த ஊர் அம்மன்  கோயிலுக்கு ரொம்ப  நாளா கோபுரம்  இல்லாமல் இருந்தது இது தான் சமயம் என்று எண்ணி   அந்த  கோபுரத்தை அவர் செலவில் கட்டி கொடுக்க சொல்லி விட்டார் ! .அவரும்  ஆளை விட்டால் போதும் என்று எண்ணி கட்டி கொடுத்து விட்டார் !
  பண்ணையார்  லேசில்  காசை  இளக்க மாட்டார் ! அம்மன் விளையாடிய  விளையாட்டு இது என்று கூறுகிறார்கள்  ஊர்மக்கள் ! 
                                                  

Wednesday, 15 July 2015

நாற்காலி செய்த வேலை !

    ஆனந்தம் பிள்ளை  அந்த ஊர் கிராம முன்சீப் ! அந்த நாளில் ஒவ்வொரு கிராமத்திற்கும்  கிராம முன்சீப் , கிராம  கர்ணம்  என இருவர் இருப்பர் !அவர்களுக்கு தெரியாமல் அந்த ஊரில் எதுவும் நடக்காது ! அன்னியர் பதிவேடு என்று ஒரு பதிவேடு இருக்கும் ! அந்த ஊருக்கு புதியவர்கள் யாராவது  வந்தால் அதில் பதியப்படும் ! இப்போது அந்த பதிவேட்டை அன்னியர்கள் கொண்டு போய் விட்டார்கள் போலும் !இப்போது  அந்த பதவிகள் நீக்கப்பட்டு விட்டாலும்  அந்த  காலத்தில் நடந்ததை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது !

   ஆனந்தம் பிள்ளைக்கு  என்று அந்த ஊரில்  தனி மரியாதை இருந்தது !அந்த ஊர் பண்ணையார் வீட்டுக்கு போனாலும் அவருக்கு மரியாதை உண்டு ! அவர் இறந்தபின்  அவர் மகன் காசிநாதன் என்பவருக்கு அந்த வேலை கிடைத்தது !அந்த  வேலை பரம்பரை வேலை !காலன் வந்து  கூட்டிக்கிட்டு போகும் வரை அந்த வேலை அவருடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் !  அவர் கண்ணை மூடிய உடன் ஆட்டோமாட்டிக்காக அவர் மகனுக்கு வேலை கிடைத்து விடும் !
  காசிநாதன் வேலை ஒப்புக்கொண்ட்வுடன் மரியாதை நிமித்தமாக  ஒருநாள் சுப யோக சுப தினம் பார்த்து பண்ணையார் வீட்டுக்கு போனார் ! அன்னைக்கு இருவருக்குமே படுபட்சி  சரி இல்லை போலும் ! இவர் போகும் பொது பண்ணையார் ராவணன் அரியாசனத்தில் இருந்தது போல இருந்தார் !ஆஜானுபாகுவான  பண்ணையார் குட்டையாக இருந்த காசிநாதனைப்பார்த்து  ஏளனமாக சிரித்து கொண்டார் ! காசிநாதன் ஐந்து அடிக்கு குறைவான உயரம் ! வயது குறைவு ! பண்ணையார் புடதியில் சனி ஏறி கொண்டதால் காசிநாதனை மதிக்கவில்லை ! இது தெரியாத அங்கிருந்த வேலைக்காரன் ஆனந்தம்பிள்ளைக்கு  போடுவது போல அவர் மகன் காசிநாதனுக்கும் ஒரு நாற்காலியை கொண்டு வந்து போட்டான் !  தீயில் கால் வைத்தது போல பண்ணையார் குதிக்க ஆரம்பித்து விட்டார் ! ஒன்னை யாருலே நாற்காலி போடச்சொன்னது ! அறிவிருக்கா ? சின்னப்பையனுக்கெல்லாம்  நாற்காலி  போடறீயே ! என் முன்னால அவன் உக்காருவானாடா !முட்டாப்பயலே !அவன் நிப்பான் ! நீ போ  என்றார் ! ஊசி சிறுசானாலும் உக்காரும்போது குத்தினால் வலி எப்படி இருக்கும்னு பண்ணையாருக்கு தெரியல !
  சிறுது நேரத்திலே காசிநாதன் திரும்பி விட்டார் ! அதிலுருந்து  வடக்க  தலை வச்சு படுத்தாலும் படுப்பாறே  தவிற  பண்ணையார் வீட்டு பக்கம் தலை வச்சு  படுக்க மாட்டார் !

                                             
  ஒரு நாள் பண்ணையாரின் தகப்பனார் இறந்து  விட்டார் .ஊரே திரண்டு வந்து விட்டது! மாவட்ட அதிகாரிகள் கூட வந்து  மாலை அணிவித்து சென்றார்கள் ! கிராமக் கர்ணமும் ஒரு மாலையை போட்டு விட்டு போனார் !ஆனால் முன்சீப் வரவே இல்லை !
    மாலை ஆறு மணிக்கு பாடியை தூக்க ஏற்பாடு ஆகி கொண்டிருந்தது ! அப்போது இரண்டு  போலீஸ் ஜீப் வந்து நின்றது ! பண்ணையாருக்கு ரொம்ப சந்தோசம் ! நமது தகுதி தெரிந்து மாவட்ட போலீஸே  மாலை போட வந்துட்டார்களே என்று ! சார்  வாங்க  வாங்க நீங்க எல்லாம் வருவீங்கன்னு நான் எதிர் பாக்கவே இல்லை என்றார் ! நாங்களும் எதிர் பாக்கலே என்றனர் போலிஸ் ! பண்ணையாருக்கு  ஒன்னும் புரியல ! என்ன சொல்றீங்க என்றார் ! உங்க தகப்பனார் உடலை  போஸ்ட் மாடம் செய்ய கொண்டு போறோம் என்றது போலீஸ் ! பண்ணையாருக்கு சர்வாங்கமும்  நடுங்க ஆரம்பித்து விட்டது !என்ன சார் சொல்றீங்க ?
  அவர் சாவில் மர்மம் இருப்பதாக எங்களுக்கு தந்தி வந்திருக்கு என்றது போலிஸ் 
அப்படி யார் சார் தந்தி கொடுத்தது ?
 உங்க ஊர் முன்சீப்தான்
அப்போதுதான் இதுவரை முன்சீப் வராத மர்மம் புரிந்தது!
அவர் வந்து எழுதி கொடுத்தால் தான் பாடியை எடுக்க முடியும் !இல்லை என்றால் போஸ்ட் மாடம் தான் செய்யணும்
 நாளா பக்கமும் ஆட்கள் பறந்தனர் !முன்சீப்பை கண்டு பிடிக்க முடிய வில்லை !பண்ணையாருக்கு சப்த நாடியும் ஒடிங்கி விட்டது !ஒரு சின்னப்பயல் நம்மை ஆட்டம் காண வைத்து விட்டானே !ஊரெல்லாம் அவரை பார்த்து சிரிப்பது போல அவருக்கு தோன்றியது !
 நேரம் போய்க்கொண்டிருந்தது !போலிஸ் பாடியை போஸ்ட் மாடத்துக்கு கொண்டு போகும் வேலையை தொடங்கியது !
பண்ணையாருக்கு கோபம் ஒரு பக்கம், அவமானம் ஒரு பக்கம், செய்வது அறியாது திகைத்து நின்றார் !
  அந்த நேரத்தில் முன்சீபை எங்கிருந்தோ கூட்டிக்கொண்டு வந்து விட்டனர் !
  பண்ணையார் முன்சீப்பிடம் ஒன்றும் கேட்க வில்லை ! போலிஸ் தான் ஏன் சார் இப்படி தந்தி  கொடுத்தீர்கள்? என்று கேட்டது !
   சார் எங்க அப்பா இறந்து எனக்கு வேலை கிடைச்சவுடன்   மரியாதை நிமித்தமாக இவரை பாக்க வந்தேன் ! வேலைக்காரன் நாற்காலி கொண்டு வந்து போட்டான்! இவர் அவனை கோபித்து நாற்காலியை திரும்ப கொண்டு போக சொல்லி விட்டார் ! சார் எனக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் !நான் வகிக்கும்  பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா ? அதான் அவருக்கு பதவி என்றால்  என்ன என்பதை காட்ட நினைத்தேன் என்றார் ! 
   அதன்பின் எல்லோரும் இருந்து பேசி முன்சீபிடமும் , பன்னையாரிடமும் ,ஊர் மக்கள் சிலரிடமும் எழுதி வாங்கி ஒரு வழியாக இரவு பதினோரு மணிக்கு காரியங்கள் முடிந்தன !
  அதன்பின்  பண்ணையார் வீட்டில் அவருக்கு முன் நிரந்தரமாக ஒரு நாற்காலி போடப்பட்டு வி்ட்டது !முன்சீப்பை தவிற வேறு யாரும் அதில் உட்க்கார கூடாது  என்று உத்தரவு போட்டு விட்டார்!
                                                     


Sunday, 12 July 2015

சுசீந்திரம் ஆஞ்சநேயர்

                                                        சுசீந்திரம்  ஆஞ்சநேயர்
   சுசீந்தரம்  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது! முன்பு கேரளா மாநிலத்துடன் இருந்து பின்பு தமிழ் நாட்டுடன் இணக்கப்பட்டது.இந்திரன் அகலிகை விசயத்தில் சாபம் பெற்று இங்கே வந்து தான் சாபத்தை தீர்த்து சுத்தம் செய்து கொண்டதனால் சுசீ+ இந்திரம் என இப்பெயர் வந்தது என சிலர் கூறுகிறார்கள் ! மற்றும் சிலர் ஸ்ரீஇந்திரம்  என்ற பெயரே பழந்தமிழில் சிவிந்திரம் என்று மருவியது என்றும் அதுவே சிசீந்திரம் என அழைக்கபடுவதாகவும் கூறுகிறார்கள் .இன்றளவும் அர்த்தசாம பூஜையை இந்திரனே வந்து நடத்துவதாக ஐதீகம் !
  சுசீந்திரத்தில் பிரசித்தி பெற்ற தாணுமாலய சுவாமி கோயில் உள்ளது .இந்திரன் தான் சாபத்தை நீக்க சிவன் விஷ்ணு பிரம்மா மூவரையும் ஒரே மூர்த்தமாக இங்கு வைத்து வணங்கியதாகவும் அதன்பின் அவன் சாபம் நீங்கியதாகவும் ஐதீகம் ! அதனாலேயே ஸ்தாணுமாலயன் என்பது மூலவரின் பெயர் !ஸ்தாணு என்றால் சிவன் .மால் என்றால் விஷ்ணு .அயன் என்றால் பிரம்மன்! ஆனால் மூலவர் சிவலிங்கம் தான் !அந்த லிங்கம் மும்மூர்த்தியாக வழிபடப்படுகிறது
                           






ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக பிரமாண்ட பிரகாரம் அமைந்த தலம்
இது! தூண்களில் சிற்ப வேலைப்பாடுகளும் விளக்கேந்திய சிலைகளும் சிற்பக்கலையின் நுணுக்கத்தை பறை சாற்றுவதாக உள்ளன !




சுசீந்திரம்  என்ற உடன் நினைவுக்கு வருபவர் ஸ்ரீஆஞ்சநேயர்தான் ! மும்மூர்த்திகளும் ஒருங்கே இருந்து அருள் பாலிக்கும் தலம் என்றாலும் சுசீந்திரம் என்றதும் உடன் நினைவுக்கு வருபவர் ஸ்ரீ ஆஞ்சநேயர்தான் !வடக்கு   பிரகாரத்தில் உள்ள ஸ்ரீராம பிரான்  சன்னதிக்கு அருகில் கூப்பிய கரங்களுடன் சுமார் 18 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார் ! இவருக்கு விஷ்வ ரூப ஆஞ்சநேயர்  என்று திருநாமம் !கேட்ட வரங்களை அள்ளித்தருகிற வரப்பிரசாதி இவர் !

அன்னியர்கள் படை எடுப்பின் போது பிரமாண்டனதாக திகழும் 
ஸ்ரீஆஞ்சநேயரின் திரு விக்கிரக மூர்த்தத்தை எங்கே சிதைத்து விடுவார்களோ என பயந்து பூமியில் புதைத்து வைத்தனராம் !காலங்கள் 
உருண்டோடின ! இன்றைக்கு 85 வருடங்களுக்கு முன்பு இந்த விஷயத்தை அறிந்த அடுத்த தலைமுறையினர் ஓன்று சேர்ந்து புதைத்த இடத்தில் இருந்து ஸ்ரீஆஞ்சநேயரை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து வழி பட துவங்கினர் என்கின்றனர் வெண்ணெய் காப்பு செய்வது இங்கு விஷேசம் !
பின்னாளில் எத்தனையோ ஊர்களில் மிகப் பெரிய அளவில் ஸ்ரீ ஆஞ்சநேரின்  விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்திருந்தாலும்  புராதனமான ஸ்ரீஅனுமன் விக்கிரகம் என்றால்  அது சுசீந்திரம் ஸ்ரீ விஷ்வ ரூப ஆஞ்சநேயர் என்கின்றனர் வரலாற்று  ஆய்வாளர்கள் !
அனுமனை கர்நாடகத்தில் ஹனு மந்தையா என்றும் ஆந்திராவில் ஆஞ்சநேயலு என்றும் மகாராஷ்டிராவில்  மாருதி என்றும் சில மாநிலங்களில் மகாவீர் என்றும் அழைக்கின்றனர் !
சுசீந்திரம் கன்னியா குமரியில் இருந்து 11  கி.மீ. தூரத்திலும் ,நாகர்கோவிலில் இருந்து 7  கி.மீ. தூரத்திலும் ,திருநெல்வேலியில் இருந்து 70  கி.மீ.தூரத்திலும் உள்ளது !