படம் கூகுள்
நான் வருவாய் துறையில் பணி புரிந்த சமயம்! தமிழ்நாடு சர்வீஸ் கமிசன் பரீட்சை அடிக்கடி நடக்கும் ! அதற்கு பள்ளிகூடங்களில் இடம் வாங்க வேண்டும் ! அந்த காலத்தில் ஒரு நபர் பரீட்சை எழுதுவதற்கு பள்ளிக்கூடத்திற்கு ஐம்பது பைசா சர்வீஸ் கமிசனில் இருந்து கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன் !500 பேர் எழுதினாலும் 250 ரூபாய்தான் கிடைக்கும் ! அதனால் ஸ்கூல் காரர்கள் விரும்ப மாட்டார்கள் ! பெஞ்சுகளை ஒழுங்கு படுத்தி போட வேண்டும் ! பரீட்சை எழுத வருவதற்கு முன் திறந்து வைக்க வேண்டும் ! அவர்கள் எழுதி முடித்து போகும் வரை காத்திருக்க வேண்டும் !குடி நீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் !இதெல்லாம் முடிந்தபின் திரும்பவும் பென்ச் டெஸ்க் இவைகளை ஒழுங்கு படுத்த வேண்டும் ! இதனால் ஸ்கூலில் இடம் தர மாட்டார்கள் !ஆனால் அதிகாரிகள் எங்களை விட மாட்டார்கள் !எப்படியாவது வாங்கி வர வேண்டும் என்று உத்தரவு போட்டு விடுவார்கள் ! நாங்கள் மத்தளம் மாதிரி இரண்டு பக்கமும் அடி வாங்க வேண்டும் !
கம்பும் ஒடியக்கூடாது பாம்பும் சாகனும் !சண்டையும் போடக்கூடாது ! சீட்டும் வாங்கணும் !கயிறு மேல் நடக்கும் வித்தை மாதிரித்தான் ! நாங்க சர்க்கஸில் வேலைக்கு போனால் உடனே எடுத்துக்குவாங்க ! அவ்வளவு வேலையும் தெரியும் ! தெரியலையின்னா வேலை பாக்க முடியாது !

படங்கள் கூகுள்

ஆபிசுக்கு பக்கத்திலுள்ள ஸ்கூல்ல போய் சீட் கேக்க போனோம் !சாயந்திர நேரம் ! HM ஆபிஸ் முன் நாலைந்து பேர் நின்று பெசிக்கொண்டு இருந்தனர் ! HM இருக்காங்களா? என்று கேட்டோம் ! நாங்க எதற்கு வந்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொண்டார்கள் போலும் ! பாம்பின் கால் பாம்பறியாதா என்ன? ஊருக்கு போயிருக்காங்க ! வர ரெண்டு நாளாகும் என்றனர் !சரி வந்தவுடன் பார்க்க வருகிறோம் என்று சொல்லி திரும்பினோம்! எங்களுடன் வந்த ஒருவர் HM அவர்களுடன் நிற்கிறார்! உங்களிடம் பொய் சொல்லுகிறார்கள் என்றார் !
அவர்கள் நம்மிடம்பொய் சொல்லுகிறார்கள் !இனி நாம் வேற ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டியதுதான் என்று நினைத்து திரும்ப அவர்களிடம் " சார் விஷயம் வேறொன்றுமில்லை ! உங்க பள்ளிகூட காம்பவுண்டு சுவர் புறம்போக்கில் இருப்பதாக புகார் வந்திருக்கு ! நாளை அதை அளந்து பாக்க சர்வேயர் வாரார் !அதை சொல்லிட்டு போகத்தான் வந்தோம்!' என்று சொல்லிவிட்டு திரும்பினோம் ! அதற்குள் அவர்கள் நிலவரம் கலவரமாகி விட்டது ! சார் சார் என்று பின்னாலேயே வந்தார்கள் ! சார் எங்களை மன்னிச்சுடுங்க ! நீங்க யாரென்று தெரியாம பொய் சொல்லிட்டோம் ! இவர்தான் HM ! காம்பவுண்டு சுவர அளந்தா பள்ளிக்கூடம் பேர் கெட்டுடும் ! பிள்ளைகள் வராது !தயவு செஞ்சு அதை நிப்பாட்டுங்க என்றனர் !
சார்! நீங்க சர்க்காரை மதிச்சா சர்க்கார் உங்களை மதிக்கும் என்றேன் !
உடனே நாற்காலி கொண்டு வந்து போட்டு உக்கார சொன்னாங்க ! உங்களுக்கு என்ன உதவி செய்யணும் சொல்லுங்க செய்யுறோம் ! என்றனர் !
பப்ளிக் சர்விஸ் கமிசன் பரீட்சை எழுத 500 பேருக்கு அனுமதி வேண்டும் என்றோம் !
உடனே எழுதி கையெழுத்து போட்டு சீல் வைத்து கொடுத்து விட்டனர் ! 150 பேருக்கு கிடைக்குமா என்று கவலையோடு போன எங்களுக்கு 500 பேருக்கு
சீட் கிடைக்க காரணம் அவங்க சொன்ன பொய்யும் நாங்க சொன்ன பொய்யும் தான் !
வள்ளுவர் சொன்னது போல நாங்கள் சொன்ன பொய்யும் இந்த இடத்தில வாய்மைதான் !யாருக்கும் கெடுதல் இல்லை !பல மாணவர்களுக்கு பரீட்சை எழுதும் நன்மை கிடைத்தது ! வாழ்க சமயோசிதம் !

















