Saturday, 26 September 2015

மூத்த குடிமக்கள்

                         உலக முதியோர் தினம் 
                       01-10-15 வியாழக்கிழமை 
                                   

முதியோரை போற்றுவோம்!


                          உலக  முதியோர்  தினம்
                                   01-10-15 வியாழக்கிழமை 
                       

             
           

Wednesday, 16 September 2015

அந்தக் கால நினைவுகள் ! படித்த ஞாபகம் !

  முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மனைவி லலிதா  சாஸ்திரி !இவர் கவிஞரும் கூட !இவருடைய பக்தி பாடல்களை AVM கொலம்பியா  இசைத்தட்டாக சரஸ்வதி ஸ்டோர்ஸ் மூலம் வெளியிடப்பட்டது! லதா மங்கேஸ்கர் இனிய  குரலில் பாடி இருந்தார் !
                                                                
   ஏ.வி,எம் மின் மகள் வெற்றிலை பூ பழங்கள் இவைகளுடன்  அழகிய பட்டுப் புடவை ஒன்றையும் ஒரு பெரிய தட்டில் வைத்து  அதனுடன்  இசைத்தட்டையும்வைத்து  சாஸ்திரயின் மனைவியைச் சந்தித்து கொடுத்து விட்டு வந்தார் !
   ஏ.வி.எம்மின்  மகள் தம் இருப்பிடம் வந்தபோது சாஸ்திரியின் உதவியாளர் பட்டுப்புடவையுடன் காத்திருந்தார் !"நான் பிரதமரின் மனைவி  என்பதால் இதை பெறுவது முறையாக இருக்காது !உடனே  மறுத்தால் மனம் வருந்துவீர்கள் என்பதால் இப்போது அனுப்பி உள்ளேன் !"என்று கூறி விட்டுருந்தார் !இப்படியும்  இருந்திருக்கிறார்கள் !

Monday, 14 September 2015

அந்தக்கால நினைவுகள் படித்த ஞாபகம் !

                                                         ஜகத்குரு 
காஞ்சி பெரியவர்  படத்தை பத்திரிக்கையில் ஒரு ஜெர்மன் அறிஞர்  பார்த்தார் !ஒரு பரமாச்சாரியார் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே !அவரை கட்டாயம் போய்  பார்க்கவேண்டும் ! அவரை வணங்க வேண்டும் என்று தீர்மானம்  பண்ணினார் !திருநெல்வேலி பக்கத்தில் ஒரு கிராமத்தில் பெரியவர் இருந்தார் ! அவரை வரவேற்று கிராமம் முழுதும் ஜகத்குருவே வருக  வருக  என்று எழுதப்பட்டிருந்தது !ஜெர்மன் அறிஞர் பெரியவரை பார்த்தார் ! வணங்கினார் !பின்பு பெரியவரை பார்த்து  "நீங்கள்  ஒரு  மதத்திற்கு  மட்டும் தானே குரு !அப்படி இருக்கும் பொது எல்லோருக்குமே குருஎன்கிற அர்த்தத்தில் ஜகத்குரு என்று போட்டிருக்கிறதே" ! என்று கேட்டார் ! பெரியவர் சிரிக்கிறார்  !ஓ .. இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறது எனக்கு இதுவரைக்கும் தெரியாமபோயிட்டுது !நான் வந்து ஜகத்குரு அதாவது  ஜகத்தில் உள்ள எல்லா ஜந்துக்களையும் நான் குருவாக நினைச்சு வணங்குறேன் ! அவற்றிலே இருந்து நான் எத்தனையோ பாடங்கள் இன்னமும் கற்றுக்கொண்டு இருக்கிறேன் !அதாவது இந்த அகிலமே நமக்கு குரு!என்று கூறினாராம் !

Sunday, 13 September 2015

ஜோதிடம் ஒரு சாகரம்

 
 ஜோதிடக்கலை  மகா சமுத்திரம்  போன்றது ! அதில் முங்கி முத்து எடுப்பவர்களும் உண்டு ! வெறும் கிளிஞ்சல்கள் எடுப்பவர்களும் உண்டு !அவரவர்கள் திறமையை பொறுத்தது !ஏட்டுப்படிப்பை விட அனுபவம் மூலமாக தெரிந்தவர்கள் தான் திறைமைசாலிகள்  !
   ஒரு தடவை  என் நண்பரின் மனைவி பெண் ஜோதிடர் ஒருவரிடம் தன் ஜாதகத்தை  காட்டி இருக்கிறார் ! அவர் இன்னும் கொஞ்ச  நாள்தான் உங்களுக்கு இருக்கிறது !எனவே உங்கள் பிள்ளைகளுக்கு எழுதி வைக்க வேண்டியதை எழுதி வைத்து விடுங்கள் என்று கூறி இருக்கிறார் !இதை கேட்டதும் நண்பவரின் மனைவி அழுத கண்ணும் வீங்கிய  முகமுமாக வீட்டில் வந்து படுத்து விட்டார் ! என் நண்பர் வந்து பார்த்து விவரம் கேட்டிருக்கிறார் !அவர் மனைவி முழுவதையும் சொல்லி இருக்கிறார் !
 நண்பன் கவலையோடு என்னிடம் சொன்னார் ! நான் அவர்கள் இருவரையும் எனக்கு தெரிந்த பெரிய ஜோதிடரிடம் அழைத்துச் சென்றேன் !அவர் அந்த அம்மாவின்  ஜாதகம் முழுவதையும் அலசி  ஆராய்ந்து பார்த்து விட்டு  இந்த அம்மாளுக்கு ஆயுசு கெட்டி !  90 வயசு வரைக்கும் இருப்பார் ~ கவலையே வேண்டாம்  என்று கூறி அதற்கான விளக்கங்களையும் பல  புத்தகங்களை  வைத்து மேற்கோள்  காட்டி  எடுத்துக் கூறினார் ! அதோடு இது போன்று அரை குறை  ஜோசியரிடம் ஜாதகத்தை காட்டாதீர்கள்  என்றும் கூறினார் ! அதன் பிறகுதான் அந்த  அம்மாவின் முகத்தில்  களை வந்தது !
                                         
   பிரிதொரு நண்பருக்கு  நிகழ்ந்த  அனுபவம் வேறு மாதிரி ! அவர் வீட்டில் தனியாக  இருந்திருக்கிறார் ! முன் வாசல் கதவை தாழ்ப்பாள் போடாமல் இருந்திருக்கிறார் ! அப்போது ஆஜானுபாவான மனிதர் ஒருவர் கதவை திறந்து கொண்டு வீட்டிக்குள் வந்து விட்டார் ! நண்பர் " யார் நீங்கள் ?என்ன வேண்டும் உங்களுக்கு ? :என்று உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளிக் காட்டிக்கொள்ளாமல் கேட்டிருக்கிறார் ! அவர் நான் ஒரு ஜோசியர் ! உங்க வீட்டுப்பக்கம் வரும்போதே உங்க வீட்டுக்குள்ளே போ என்று எனக்கு அசரீரி வாக்கு கிடைத்தது ! அதான் வந்தேன் என்றார் !என்ன அசரீரி கிடைத்தது என்று நண்பர் கேட்டிருக்கிறார் ! அதற்கு வந்தவர்  உங்கள் பிள்ளைக்கு கண்டம் இருக்கிறது ! அதற்கு அறுபடை முருகனுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் ! அதற்கு  ஆறாயிரம் ரூபாய் செலவாகும் .செய்யவில்லை என்றால் உங்கள் பிள்ளைக்கு உயிருக்கு அபாயம் இருக்கிறது என்று கூறி உள்ளார் !
 நண்பர் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்திருக்கிறார் ! வந்தவர்
 உங்களுக்கு நம்பிக்கை இலை அல்லவா ? என்று கேட்டு ஒரு துணியை எடுத்து வாருங்கள் என்று கூறி இருக்கிறார் ! நண்பரும் ஒரு துணியை எடுத்து வந்திருக்கிறார் !  அதை பல துண்டுகளாக கிழியுங்கள் என்று ஜோசியர் கூறி இருக்கிறார் .நண்பரும் பல துண்டுகளாக கிழித்திருக்கிிறார் ! பிறகு ஜோசியர் எல்லா துண்டுகளையும்  ஒன்றாக சுருட்டுங்கள் என்று கூறி உள்ளார் ! நண்பரும் எல்லா துண்டுகளையும் சுருட்டி உள்ளார் ! இப்போது விரியுங்கள்  என்று ஜோசியர் கூற நண்பரும் விரித்திக்கிறார் ! கிழித்த துண்டுகள் எல்லாம் சேர்ந்து முன்பு இருந்தது போல ஒரே துணியாக வந்து விட்டது !
 நண்பருக்கு வியப்பு ஒரு புறம் ! பயம் ஒரு புறம் !ஆனால் நண்பருக்கு தெளிவும் தைரியமும் வந்து விட்டது ! இவருக்கு சித்து தெரிந்திருக்கிறது ! அதை வைத்து நம்மை மிரட்டுகிறார் ! இவரிடம் இருந்து ஜாக்கிரதையாக தப்பிக்க வேண்டும் ! இல்லை என்றால் நம்மை மயக்கியோ அல்லது அடித்து போட்டு விட்டோ வீட்டில் உள்ள பணம் நகைகள் இவைகளை சுருட்டிக்கொண்டு பொய் விடக்கூடும் !என்று சினிமா படம் போல மனதில் ஓடி இருக்கிறது !  
                                                           
 இவரிடம் சமாளிக்க வேண்டும் என்று எண்ணி என்னால் ஆறாயிரம் ரூபாய் கொடுக்க முடியாது என்று கூறி உள்ளார் ! இருவரும்  பேரம் பேசிப் பேசி கடைசியில்  மூன்றாயிரம் என்று முடித்திருக்கிறார் ! மூன்றாயிரம் கிடைத்து விட்டது என்று ஜோசியர் சந்தோசமாக இருக்க நண்பர் பணத்தை எடுத்து வருகிறேன் என்று கூறி உள்ளே போய் உள் கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார் ! பின்பு பக்கத்து வீட்டு காரர்களை சத்தம் போட்டு கூப்பிட அவர்கள் வருவதற்குள் ஜோசியர் எழுந்து  ஓடி விட்டார் !நண்பரின் சமயோசிதத்தை எல்லோரும் பாராட்டினார்கள் !
                                                               
    

அந்தக்கால நினைவுகள் !

  நேருவும் காமராஜரும் டில்லியில் நடந்த உலக  கண்காட்சியை பார்க்க சென்றிருந்தனர் ! நேரு  அங்கிருந்த  எடை பார்க்கும் எந்திரத்தில்  எடை பார்த்தார் !  அவருடன் சென்றிருந்தவர்களும்  எடை பார்த்தனர் ! ஆனால் காமராஜர்  மட்டும் எடை பார்க்கவில்லை ! நேரு சொல்லியும்  கேட்கவில்லை  ! பின்  நேரு  சொன்னார் !காமராஜர்  ஏன் எடை பார்க்கவில்லை தெரியுமா ?இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு  கூட இப்பொழுது  அவரிடம் இருக்காது  என்றார் !பிறகு  தானே காமராஜருக்கு காசு போட்டு எடை பார்த்தாராம் !

Friday, 11 September 2015

முகூர்த்த நேரம்




படம் கூகுள் 
இந்துக்களின்  திருமணத்தின்  போது தாலி கட்டும் நேரத்தில் சொல்லப்படும் ஸ்லோகம் !
                  மாங்கல்யம்     தந்து      நாநேந
                  மமஜீவன         ஹேதுனா
                  கண்ட்டே      பத்நாமி சுபகே
                   சஞ்சீவ        சரதஸ்   ஸதம்
    இதன் பொருள் :  இது புனிதமான  கயிறு ! நான் நல்லபடியாக  ஜீவித்திருக்க  வலிமை  பெற்றது ! இதை நான் உன் கழுத்தில் அணிவிக்கிறேன் ! நீ  சகல
  சௌபாக்யவதியாய்  நூறாண்டுகள் சுக போகங்களுடன் வாழ்ந்திருப்பாயாக !
                                 
படம்  கூகுள்