Monday, 14 September 2015

அந்தக்கால நினைவுகள் படித்த ஞாபகம் !

                                                         ஜகத்குரு 
காஞ்சி பெரியவர்  படத்தை பத்திரிக்கையில் ஒரு ஜெர்மன் அறிஞர்  பார்த்தார் !ஒரு பரமாச்சாரியார் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே !அவரை கட்டாயம் போய்  பார்க்கவேண்டும் ! அவரை வணங்க வேண்டும் என்று தீர்மானம்  பண்ணினார் !திருநெல்வேலி பக்கத்தில் ஒரு கிராமத்தில் பெரியவர் இருந்தார் ! அவரை வரவேற்று கிராமம் முழுதும் ஜகத்குருவே வருக  வருக  என்று எழுதப்பட்டிருந்தது !ஜெர்மன் அறிஞர் பெரியவரை பார்த்தார் ! வணங்கினார் !பின்பு பெரியவரை பார்த்து  "நீங்கள்  ஒரு  மதத்திற்கு  மட்டும் தானே குரு !அப்படி இருக்கும் பொது எல்லோருக்குமே குருஎன்கிற அர்த்தத்தில் ஜகத்குரு என்று போட்டிருக்கிறதே" ! என்று கேட்டார் ! பெரியவர் சிரிக்கிறார்  !ஓ .. இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறது எனக்கு இதுவரைக்கும் தெரியாமபோயிட்டுது !நான் வந்து ஜகத்குரு அதாவது  ஜகத்தில் உள்ள எல்லா ஜந்துக்களையும் நான் குருவாக நினைச்சு வணங்குறேன் ! அவற்றிலே இருந்து நான் எத்தனையோ பாடங்கள் இன்னமும் கற்றுக்கொண்டு இருக்கிறேன் !அதாவது இந்த அகிலமே நமக்கு குரு!என்று கூறினாராம் !

No comments:

Post a Comment