Sunday, 13 September 2015

ஜோதிடம் ஒரு சாகரம்

 
 ஜோதிடக்கலை  மகா சமுத்திரம்  போன்றது ! அதில் முங்கி முத்து எடுப்பவர்களும் உண்டு ! வெறும் கிளிஞ்சல்கள் எடுப்பவர்களும் உண்டு !அவரவர்கள் திறமையை பொறுத்தது !ஏட்டுப்படிப்பை விட அனுபவம் மூலமாக தெரிந்தவர்கள் தான் திறைமைசாலிகள்  !
   ஒரு தடவை  என் நண்பரின் மனைவி பெண் ஜோதிடர் ஒருவரிடம் தன் ஜாதகத்தை  காட்டி இருக்கிறார் ! அவர் இன்னும் கொஞ்ச  நாள்தான் உங்களுக்கு இருக்கிறது !எனவே உங்கள் பிள்ளைகளுக்கு எழுதி வைக்க வேண்டியதை எழுதி வைத்து விடுங்கள் என்று கூறி இருக்கிறார் !இதை கேட்டதும் நண்பவரின் மனைவி அழுத கண்ணும் வீங்கிய  முகமுமாக வீட்டில் வந்து படுத்து விட்டார் ! என் நண்பர் வந்து பார்த்து விவரம் கேட்டிருக்கிறார் !அவர் மனைவி முழுவதையும் சொல்லி இருக்கிறார் !
 நண்பன் கவலையோடு என்னிடம் சொன்னார் ! நான் அவர்கள் இருவரையும் எனக்கு தெரிந்த பெரிய ஜோதிடரிடம் அழைத்துச் சென்றேன் !அவர் அந்த அம்மாவின்  ஜாதகம் முழுவதையும் அலசி  ஆராய்ந்து பார்த்து விட்டு  இந்த அம்மாளுக்கு ஆயுசு கெட்டி !  90 வயசு வரைக்கும் இருப்பார் ~ கவலையே வேண்டாம்  என்று கூறி அதற்கான விளக்கங்களையும் பல  புத்தகங்களை  வைத்து மேற்கோள்  காட்டி  எடுத்துக் கூறினார் ! அதோடு இது போன்று அரை குறை  ஜோசியரிடம் ஜாதகத்தை காட்டாதீர்கள்  என்றும் கூறினார் ! அதன் பிறகுதான் அந்த  அம்மாவின் முகத்தில்  களை வந்தது !
                                         
   பிரிதொரு நண்பருக்கு  நிகழ்ந்த  அனுபவம் வேறு மாதிரி ! அவர் வீட்டில் தனியாக  இருந்திருக்கிறார் ! முன் வாசல் கதவை தாழ்ப்பாள் போடாமல் இருந்திருக்கிறார் ! அப்போது ஆஜானுபாவான மனிதர் ஒருவர் கதவை திறந்து கொண்டு வீட்டிக்குள் வந்து விட்டார் ! நண்பர் " யார் நீங்கள் ?என்ன வேண்டும் உங்களுக்கு ? :என்று உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளிக் காட்டிக்கொள்ளாமல் கேட்டிருக்கிறார் ! அவர் நான் ஒரு ஜோசியர் ! உங்க வீட்டுப்பக்கம் வரும்போதே உங்க வீட்டுக்குள்ளே போ என்று எனக்கு அசரீரி வாக்கு கிடைத்தது ! அதான் வந்தேன் என்றார் !என்ன அசரீரி கிடைத்தது என்று நண்பர் கேட்டிருக்கிறார் ! அதற்கு வந்தவர்  உங்கள் பிள்ளைக்கு கண்டம் இருக்கிறது ! அதற்கு அறுபடை முருகனுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் ! அதற்கு  ஆறாயிரம் ரூபாய் செலவாகும் .செய்யவில்லை என்றால் உங்கள் பிள்ளைக்கு உயிருக்கு அபாயம் இருக்கிறது என்று கூறி உள்ளார் !
 நண்பர் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்திருக்கிறார் ! வந்தவர்
 உங்களுக்கு நம்பிக்கை இலை அல்லவா ? என்று கேட்டு ஒரு துணியை எடுத்து வாருங்கள் என்று கூறி இருக்கிறார் ! நண்பரும் ஒரு துணியை எடுத்து வந்திருக்கிறார் !  அதை பல துண்டுகளாக கிழியுங்கள் என்று ஜோசியர் கூறி இருக்கிறார் .நண்பரும் பல துண்டுகளாக கிழித்திருக்கிிறார் ! பிறகு ஜோசியர் எல்லா துண்டுகளையும்  ஒன்றாக சுருட்டுங்கள் என்று கூறி உள்ளார் ! நண்பரும் எல்லா துண்டுகளையும் சுருட்டி உள்ளார் ! இப்போது விரியுங்கள்  என்று ஜோசியர் கூற நண்பரும் விரித்திக்கிறார் ! கிழித்த துண்டுகள் எல்லாம் சேர்ந்து முன்பு இருந்தது போல ஒரே துணியாக வந்து விட்டது !
 நண்பருக்கு வியப்பு ஒரு புறம் ! பயம் ஒரு புறம் !ஆனால் நண்பருக்கு தெளிவும் தைரியமும் வந்து விட்டது ! இவருக்கு சித்து தெரிந்திருக்கிறது ! அதை வைத்து நம்மை மிரட்டுகிறார் ! இவரிடம் இருந்து ஜாக்கிரதையாக தப்பிக்க வேண்டும் ! இல்லை என்றால் நம்மை மயக்கியோ அல்லது அடித்து போட்டு விட்டோ வீட்டில் உள்ள பணம் நகைகள் இவைகளை சுருட்டிக்கொண்டு பொய் விடக்கூடும் !என்று சினிமா படம் போல மனதில் ஓடி இருக்கிறது !  
                                                           
 இவரிடம் சமாளிக்க வேண்டும் என்று எண்ணி என்னால் ஆறாயிரம் ரூபாய் கொடுக்க முடியாது என்று கூறி உள்ளார் ! இருவரும்  பேரம் பேசிப் பேசி கடைசியில்  மூன்றாயிரம் என்று முடித்திருக்கிறார் ! மூன்றாயிரம் கிடைத்து விட்டது என்று ஜோசியர் சந்தோசமாக இருக்க நண்பர் பணத்தை எடுத்து வருகிறேன் என்று கூறி உள்ளே போய் உள் கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார் ! பின்பு பக்கத்து வீட்டு காரர்களை சத்தம் போட்டு கூப்பிட அவர்கள் வருவதற்குள் ஜோசியர் எழுந்து  ஓடி விட்டார் !நண்பரின் சமயோசிதத்தை எல்லோரும் பாராட்டினார்கள் !
                                                               
    

No comments:

Post a Comment