Sunday, 12 July 2015

சுசீந்திரம் ஆஞ்சநேயர்

                                                        சுசீந்திரம்  ஆஞ்சநேயர்
   சுசீந்தரம்  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது! முன்பு கேரளா மாநிலத்துடன் இருந்து பின்பு தமிழ் நாட்டுடன் இணக்கப்பட்டது.இந்திரன் அகலிகை விசயத்தில் சாபம் பெற்று இங்கே வந்து தான் சாபத்தை தீர்த்து சுத்தம் செய்து கொண்டதனால் சுசீ+ இந்திரம் என இப்பெயர் வந்தது என சிலர் கூறுகிறார்கள் ! மற்றும் சிலர் ஸ்ரீஇந்திரம்  என்ற பெயரே பழந்தமிழில் சிவிந்திரம் என்று மருவியது என்றும் அதுவே சிசீந்திரம் என அழைக்கபடுவதாகவும் கூறுகிறார்கள் .இன்றளவும் அர்த்தசாம பூஜையை இந்திரனே வந்து நடத்துவதாக ஐதீகம் !
  சுசீந்திரத்தில் பிரசித்தி பெற்ற தாணுமாலய சுவாமி கோயில் உள்ளது .இந்திரன் தான் சாபத்தை நீக்க சிவன் விஷ்ணு பிரம்மா மூவரையும் ஒரே மூர்த்தமாக இங்கு வைத்து வணங்கியதாகவும் அதன்பின் அவன் சாபம் நீங்கியதாகவும் ஐதீகம் ! அதனாலேயே ஸ்தாணுமாலயன் என்பது மூலவரின் பெயர் !ஸ்தாணு என்றால் சிவன் .மால் என்றால் விஷ்ணு .அயன் என்றால் பிரம்மன்! ஆனால் மூலவர் சிவலிங்கம் தான் !அந்த லிங்கம் மும்மூர்த்தியாக வழிபடப்படுகிறது
                           






ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக பிரமாண்ட பிரகாரம் அமைந்த தலம்
இது! தூண்களில் சிற்ப வேலைப்பாடுகளும் விளக்கேந்திய சிலைகளும் சிற்பக்கலையின் நுணுக்கத்தை பறை சாற்றுவதாக உள்ளன !




சுசீந்திரம்  என்ற உடன் நினைவுக்கு வருபவர் ஸ்ரீஆஞ்சநேயர்தான் ! மும்மூர்த்திகளும் ஒருங்கே இருந்து அருள் பாலிக்கும் தலம் என்றாலும் சுசீந்திரம் என்றதும் உடன் நினைவுக்கு வருபவர் ஸ்ரீ ஆஞ்சநேயர்தான் !வடக்கு   பிரகாரத்தில் உள்ள ஸ்ரீராம பிரான்  சன்னதிக்கு அருகில் கூப்பிய கரங்களுடன் சுமார் 18 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார் ! இவருக்கு விஷ்வ ரூப ஆஞ்சநேயர்  என்று திருநாமம் !கேட்ட வரங்களை அள்ளித்தருகிற வரப்பிரசாதி இவர் !

அன்னியர்கள் படை எடுப்பின் போது பிரமாண்டனதாக திகழும் 
ஸ்ரீஆஞ்சநேயரின் திரு விக்கிரக மூர்த்தத்தை எங்கே சிதைத்து விடுவார்களோ என பயந்து பூமியில் புதைத்து வைத்தனராம் !காலங்கள் 
உருண்டோடின ! இன்றைக்கு 85 வருடங்களுக்கு முன்பு இந்த விஷயத்தை அறிந்த அடுத்த தலைமுறையினர் ஓன்று சேர்ந்து புதைத்த இடத்தில் இருந்து ஸ்ரீஆஞ்சநேயரை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து வழி பட துவங்கினர் என்கின்றனர் வெண்ணெய் காப்பு செய்வது இங்கு விஷேசம் !
பின்னாளில் எத்தனையோ ஊர்களில் மிகப் பெரிய அளவில் ஸ்ரீ ஆஞ்சநேரின்  விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்திருந்தாலும்  புராதனமான ஸ்ரீஅனுமன் விக்கிரகம் என்றால்  அது சுசீந்திரம் ஸ்ரீ விஷ்வ ரூப ஆஞ்சநேயர் என்கின்றனர் வரலாற்று  ஆய்வாளர்கள் !
அனுமனை கர்நாடகத்தில் ஹனு மந்தையா என்றும் ஆந்திராவில் ஆஞ்சநேயலு என்றும் மகாராஷ்டிராவில்  மாருதி என்றும் சில மாநிலங்களில் மகாவீர் என்றும் அழைக்கின்றனர் !
சுசீந்திரம் கன்னியா குமரியில் இருந்து 11  கி.மீ. தூரத்திலும் ,நாகர்கோவிலில் இருந்து 7  கி.மீ. தூரத்திலும் ,திருநெல்வேலியில் இருந்து 70  கி.மீ.தூரத்திலும் உள்ளது !




No comments:

Post a Comment