அந்த காலத்துல எல்லா கிராமத்திலும் ஒரு கால் நடை பவுண்டு இருந்தது அந்த கிராமத்திலும் ஒரு பவுண்டு இருந்தது ! அதுல ரொம்ப நாளா ஆடு மாடு அடைக்காததால பவுண்டில புல்லு ஆளுயுரதிற்கு வளர்ந்து நின்னுது ! இதை ஒருத்தன் பார்த்தான் ! அவனுக்கு தன் வீட்டுல வளருத இருபது ஆடுகளும் நினைவுக்கு வந்தது !கூடவே ஏழரையும் கூடவே சேர்ந்து வந்தது !கிராம அதிகாரிகிட்ட போயி ஐயா! பவுண்டில புல்லு ஆளுயரத்திக்கு வளர்ந்து நிக்குது ! பூச்சி கட்ட அடைஞ்சிரக்கூடாது ! நான் என் ஆடுகள மேய விட்டுரதேன் !இடம் சுத்தமாயிரும்ன்னான்!கிராம அதிகாரியும் பார்த்தாரு !சரி! இடமாவது சுத்தமாகட்டும்னு சொல்லி சாவியை கொடுத்தாரு !மேச்சுட்டு உடனே சாவியை கொண்டுவரனும்னு சொன்னாரு !இன்னொன்னும் சொன்னாரு !அதான் ரொம்ப முக்கியம் !ஆட்டை மேய விட்டுட்டு எங்கேயும் போயிராேத ! அங்கேயே இருக்கணும்ன்னாரு!

இவனுக்குதான் ஏழரைை புடதியில நின்னு ஆடுதானே ! இவன் என்ன செய்வான் ! இருபது ஆட்டையும் மேய விட்டுட்டு அங்கேயே நிக்காம கதவ பூட்டிட்டு டீ குடிக்க போயிட்டான் ! அந்த நேரம் பாக்கவா மேலதிகாரி வரணும் ? எந்த ஊருக்கோ போயிட்டு வரும் பொது வர்ற வழியில இந்த பவுன்ட பார்த்தாரு ! உடனே கிராம அதிகாரி ஆபிசுக்கு போய் பவுண்டு கணக்கபார்த்தாரு !கணக்குல ஒன்னும் பதியல ! இருபது ஆட்டையும் பதிய சொன்னாரு ! கிராம அதிகாரி விசயத்த சொல்லி பார்த்தாரு ! மேலதிகாரி கேக்கல !கிராம அதிகாரி கணக்குல பதிஞ்சிட்டாரு!
டீ குடிச்சிட்டு பவுண்டுக்கு வந்தவன் பதறி போயிட்டான் !காவலுக்கு ரெண்டு பேரு நிக்காங்க!என்னையான்னு விஷயத்தை கேட்டான் ! ஆபிசுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க ! அங்க போய்தான் விஷயம் புரிஞ்சது !குய்யோ முறையோனு முறையிட்டு பார்த்தான் ! ஒன்னும் நடக்கல !
பவுண்டு கதவ பூட்டிட்டு டீ குடிக்க போனதால வந்த வினை ! ஒரு ஆட்டை விலை பேசி இருபது ஆட்டுக்குள்ள அபராதத்தை கட்டிட்டு ஆடுகள பத்திட்டு போனான் !
காட்டுக்கு பத்திக்கிட்டு போயிருந்தா ஒரு செலவும் வந்திருக்காது ! பவுண்டுல மேய விட்டுட்டு கதவ திறந்து வச்சு நின்னுருந்தா மேலதிகாரி விஷயத்தை கேட்டுட்டு போயிருப்பாரு !இப்ப இத்துனூண்டு இடத்தில இருபது ஆட்டை மேச்சுட்டு ஒரு ஆட்டை பறி கொடுத்ததுதான் மிச்சம் ! அதான் சொல்றது சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம்னு
!
No comments:
Post a Comment