Friday, 7 August 2015

சில திருமணங்களில் சில அனுபவங்கள் !



                                                                 படம் கூகிள்   
திருமணவிழாக்களுக்கு  செல்லும்போது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவகையான அனுபவங்கள் நமக்கு கிடைக்கின்றன !என்நண்பர் ஒருவருக்கு நடை பெற்ற திருமணம் ஒன்றிற்கு  சென்றிருந்தேன் ! அதுஒரு கிராமத்தில் நடை பெற்றது ! அங்கு மதிய சாப்பாடு போட  இரண்டு  மணி  ஆகிவிட்டதுஅவ்வளவு பேருக்கும்  நல்ல பசி ! அதோடு நல்ல வெயில்  நேரம் ! இலை போட்டு சாப்பாடு பரிமாறியவுடன் எல்லோரும் அவசர அவசர மாக சாப்பிட ஆரம்பித்தனர்!  அவ்வளவுதான் எல்லோருக்கும் விக்கல் வந்துவிட்டது !அனைவரும் தண்ணீர்  தண்ணீர் என்று தவிக்க, தண்ணீர் வந்தபாடில்லை !காரணம் டம்ளர் இல்லை !ஐந்து டம்ளரை வைத்துக்கொண்டு ஒவ்வொருத்தருக்காக ஊற்றி கொடுத்து கொண்டிருந்தனர் ! பாதி பேருக்கு விக்கலில்  கண்ணீர் வந்து விட்டது ! தண்ணீர் கொடுத்தவரிடம் சொம்பை  பிடுங்கி சிலர் குடித்து விட்டனர் ! சிலருக்கு அதுவும் கிடைக்காமல் போய் விட்டது!இது ஒரு அனுபவம் !
படம்   கூகிள்
    இன்னொரு திருமண  விழா அனுபவம் வேறு மாதிரியாக இருந்தது ! மாப்பிள்ளையின் தகப்பனாரும் தாயாரும் நேரில் வந்து அழைத்தார்கள் !கட்டாயம் வர வேண்டும் என்று வற்புறுத்தி கூப்பிட்டார்கள் !அதனால் நானும் மனைவியும்  சென்றோம்! மூன்று மணி  நேரம் பஸ் பயணம்! பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆட்டோவில் திருமண மண்டபம் சென்றோம் ! அங்கு வரவேற்க  நாதி இல்லை ! உள்ளே சென்றால்  சாப்பிட சொல்ல ஆளில்லை !
நானாக மாப்பிள்ளையின் அப்பாவை கண்டு பிடித்து வணக்கம் சொன்னேன் ! அவர் வரவேற்க  வேண்டியதிருக்க நான் அவரை வரவேற்றேன் !அவர் பதிலுக்கு வாங்க என்று கூறி விட்டு  அவர் வேலையில் பிசி ஆகி விட்டார் !  வீடு தேடி வந்து  அழைக்கிறார்கள் ! அதனால் பலர் வெகு தூரத்தில் இருந்து பஸ்ஸில்  உட்கார இடம் கிடைக்காமல் நின்று கொண்டு வந்திருப்பார்கள் !இப்படி பலர்  பல கஷ்டங்களுகக்கு உள்பட்டு வந்திருப்பார்கள் ! இவர்களை  முகப்பில் நின்று முக மகிழ்வுடன் வரவேற்றால் வந்தவர்களுக்கு பயணத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் பறந்து போகும் !பலருக்கு இது தெரிவதில்லை ! 
                                               



No comments:

Post a Comment