சம அளவில் ஏலக்காய்,கிராம்பு ,வால்மிளகு ,சாதிக்காய்கொஞ்சம் தேங்காய் பூ ,இவைகளை கலந்து நீளவாட்டில் மடித்து பின்பு அகல வாட்டில் சுருட்டி வாயில் போட்டு அப்படியே மென்றால் அப்பா !வாய் எப்படி மணக்கும் தெரியுமா !அதைத்தாங்க தாம்பூலம் தரித்தல் என்று கூறலாம்!
அந்த சாறு வயிற்றுக்குள் போகும்போது குரல்வளத்ததைக்கொடுக்கும்! ஜீரண சக்தியை அதிகரிக்கும் !, வயிற்றில் தங்கி உள்ள வாயுதொந்திரவுகளை வெளியேற்றி வயிற்றை பிரியாக வைக்கும் ! வயிறு பிரச்சினை இல்லாமல் இருந்தால் கோபம் வராது !சல்லுசல்லுன்னு யார் மேலேயும் விழ மாட்டோம் !கோபம் குறைந்தால் சண்டை வராது ! சுண்ணாம்பு சத்து பற்களுக்கும் எலும்புகளுக்கும் பலத்தை கொடுக்கிறது !பாக்கு பித்தத்தை குறைக்கிறது !அது போல ஏலக்காய் கிராம்பு போன்றவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவ குணம் கொண்டவை ! உடலுக்கு நன்மைகள் தருபவை !
இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் அதை பயன் படுத்துபவரை பொறுத்து சில தீமைகளும் உண்டு !என் உறவினர் ஒருவர் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு இவற்றுடன் புகையிலை சேர்த்து போடுவார் !அந்த காலத்தில் அங்கு விலாஸ் புகையிலை சிவகிரி புகையிலை என்று பல வகைகள் உண்டு ! என் உறவினர் அங்கு விலாஸ் புகையிலை உபயோகிப்பார் !சில சமயம் அதற்கு டிமாண்டும் உண்டு !அப்போது முன் கூட்டியே மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்வார் ! இவருடன் வெற்றிலை போடுவதற்கு என்றே ஒரு கூட்டம் உண்டு ! காலையிலேயே அவர் வீட்டுக்கு ஆறு ஏழு பேர் வருவார்கள் !
அவர்களுக்கு காப்பி கொடுத்து பின்பு வெற்றிலை போட்டு ஊர் கதைகள் பேசி கலைந்து செல்வார்கள் ! இது வாடிக்கை! இவர் அதிகமாக புகையிலையை உபயோகித்து அதை ஒரு கை பார்த்ததால் புகையிலை இவர் பற்களை ஒரு கை பார்த்து விட்டது ! !புகையிலையில் உள்ள சேர்மானங்கள் அவரின் 55 வயதிலேயே அவர் பற்களை ஒவ்வொன்றாக வாயிலிருந்து வெளியேற்றி விட்டன !அந்த காலத்தில் பல் கட்டும் வசதி இல்லை !எனவே கடைசி வரை பொக்கை வாயாகவே இருந்தார் ! அவர் பேசினால் என்னேவென்றே புரியாது !புஸ் புஸ்ஸென்று காத்துதான் வரும் !அவர் மனைவிக்கு ரொம்ப சந்தோசம் ! ! தொன தொன வென்று நச்சரிக்க முடியாது அல்லவா ! ஆனால் அவர்தான் பாவம் மிகவும் சங்கடப்பட்டார் !அதை பார்த்து நாங்கள் வெற்றிலை பாக்கு பக்கம் எட்டி கூட பார்ப்பதில்லை !
சிலர் பீடா போடுவார்கள் ! லாகிரி வஸ்த்துகள் அதில் சேர்க்காமல் இருந்தால் நல்லது !
அதனுடைய மருத்துவ குணங்கள் ஒரு புறம் இருக்க விசேச காலங்களில் வெற்றிலைக்குதான் முதல் மரியாதை !திருமண விழாக்களில் வெற்றிலை
பாக்குதான் முதலிடம் வகிக்கிறது !
அதோடு விநாயகர் ஆஞ்சநேயர் இவர்களுக்கு வெற்றிலை மாலை சார்த்தி மகழ்வார்கள் !நன்மை தீமை எல்லாவற்றிலும் உண்டு ! நன்மைகளை எடுத்துக்கொண்டு தீமைகளை விலக்கி விடுவதே நமக்கு சிறப்பு !





No comments:
Post a Comment