குழந்தைகள்தான் வருங்கால தூண்கள்!
##############
குழந்தைகள்,,சிறுவர்கள், பற்றிய விஷயங்கள் படித்தேன். அதில் ஒன்று!
திருமண வீட்டில் பெரியவர்களுக்கு தாம்பூலப் பை கொடுப்பார்கள். சிறுவர்களுக்கு எதுவும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் சமூக ஆர்வலர் ஒருவரின் திருமண வீட்டில் சிறுவர்களுக்கும் தனியாக பை தயாரித்து அதில் சாக்லெட்,விசில் ,சிறுவர் கதைப் புத்தகம் இவைகளை போட்டு கொடுத்தார்.ஒவ்வொரு சிறுவர்களும் அதை பெறும் போது அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி இருக்கிறதே ! அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அவர்களையும் மதித்து இவ்வாறு கொடுப்பது சிறுவர்களின் மனதில் தன்னம்பிக்கையையும் தானும் உயர வேண்டும் என்ற எண்ணத்தையும் தருகிறது. விசிலை எடுத்து சிறுவர்கள் ஊதும் போது சத்தம் காதை துளைத்தாலும் எல்லோரும் ரசித்தனர்.ரசிக்க பழகிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு சிறுவர்களை மதித்து ஊக்கப் படுத்தியது மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது.
இரண்டாவது!
பிறந்து மூன்று மாதமான குழந்தையை உறவினர் ஒருவர் குளோசப்பில் போட்டோ எடுத்திருக்கிறார். அப்போது வெளிப்பட்ட பிளாஷ் வெளிச்சம் பட்டதும் குழந்தையின் கண்ணில் மாறுதல் தெரிந்தது. உடனே கண் மருத்துவரிடம் காட்டினர். அவர் பிளாஷ் லைட்டில் ஒரு கண் பார்வை பறி போய் விட்டது என்று சொல்லி விட்டார்.ஆர்வக் கோளாரில் இது போன்று குழந்தைகளை போட்டோ எடுக்கும் போது அதன் கதிர் வீச்சு அவர்களை பாதிக்கும்.அப்படி அவசியம் எடுக்க வேண்டுமெனில் பிளாஷ் இல்லாமல் தூர நின்று குழந்தையின் கண்ணில் வெளிச்சம் பாதிக்காத வாறு எடுக்க வேண்டும்.
சில விசேஷ வீடுகளில் தாள் வெடி ஒன்றை வெடிப்பார்கள் .அதில் இருந்து கலர் கலர் தாள்களாக சிதறும். கைக்குழந்தையுடன் சில பெண்கள் நிற்பர். அந்த குழந்தைகள் மீது இது பட்டதும் சில குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுகிறது.
எனவே சிறுவர்களை ஊக்கப்படுத்துவதும், குழந்தைகளுக்கு பங்கம் ஏற்படாதவாறு பார்த்து கொள்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும் !
அவர்கள்தானே வருங்கால பாரதத்தின் தூண்கள்!
Saturday, 27 January 2018
மனிதர்கள் பல விதம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment