Wednesday, 6 December 2017

ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

கோயில் சொத்து!
👀👀👀👀👀👀👀
எனது உறவினர் ஒருவருக்கு தமிழ் நாட்டில் உள்ள பெரிய  கோயில் ஒன்றில்.  ஆனையராக பதவி வழங்கப்பட்டது. அது D.R.O. ரேங்கில் உள்ளது.மதிப்பு மிக்கது. பெரிய மனிதர்களின்  பழக்கம் கிடைக்கும்.அவர்கள் இவரைத் தேடி வருவார்கள்.ஆனால் அவர் அந்த பதவியை வேண்டாம் என்று கூறி விட்டார்.யாருக்கும் எளிதில் கிடைக்காத பதவி உங்களுக்கு கிடைத்திருக்கிறது.அதை வேண்டாம் என்று கூறுகிறீர்களே என்று குடும்பத்தில் உள்ளவர்கள்,உறவினர்கள்,நண்பர்கள் என்று எல்லோரும் வருத்தப் பட்டனர்.
அதற்கு அவர்  கோயில் சொத்து குடும்பத்திற்கு ஆகாது என்று கூறுவார்கள். கோயிலில் பெரிய பதவி. அதனால் கோயிலில் இருந்து பிரசாதம் முதல்  எல்லாமே வீட்டிற்கு வரும். அதுவே பழக்கமாகி விடும். நம் பணம் கோயிலுக்கு போக வேண்டுமே அன்றி கோயில் பணம் ஒரு பைசா கூட வீட்டிற்கு வரக்கூடாது.சண்டிகேஸ்வர்ர் என்று ஒவ்வொரு கோயிலிலும் எதற்கு இருக்கிறார் தெரியுமா.,,? கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவரிடம்  வந்து சுவாமியை வணங்கி விட்டு அவன் அருளைத் தவிற வேறு எதையும் நான் கொண்டு செல்லவில்லை என்று அவரிடம் கூறி விட்டுத்தான் வீட்டிற்கு வர வேண்டும். சாஸ்திரங்கள் இப்படி இருக்கையில் கோயில் பணத்தை நாம் விரும்பலாமா? அதனால்தான் மனம் ஒப்பவில்லை.அந்தப் பதவியை வேண்டாம் என்றேன்.என்று. கூறினார்.அவருக்கு எவ்வளவு உயர்ந்த உள்ளம்.

No comments:

Post a Comment