கூப்பதநீர்!
▪▪▪▪▪▪
பதநீரை பானையில் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்சுவார்கள். நன்றாக வற்ற காய்ச்சினால் கறுப்பட்டி ஆகும். அதற்கு முன்பு கூழ் போன்ற நிலையில் இருக்கும். கூழ் போன்று இருப்பதால் கூழ் பதநீர் என்ற சொல்தான் கூப்பதநீர் ஆகி விட்டது.அப்படி கூழ் போன்று இருக்கும்போது அதை பச்சை பனை ஓலையை பட்டை பிடித்து அதில் இந்த கூப்பதநீரை விட்டு அதில் தேங்காய்ப்பூ, பொரி கடலை,வறுத்த வேர்க்கடலை பருப்பு ,பாதாம் பருப்பு இவைகளை போட்டு ஓலை நறுக்கினால் நன்றாக விரவி அந்த ஓலை நறுக்கினால் எடுத்து சாப்பிட்டால் தேனாமிர்தமாக இருக்கும்.அதன் சுவையே அலாதிதான்.இந்தக் கால இளைஞர்கள் இதுவரை சாப்பிடாவிட்டால் பதநீர் காய்ச்சும் இடத்தை கண்டு பிடித்து வாங்கி சாப்பிட்டு பாருங்கள்.!
Sunday, 3 December 2017
இயற்கை அதிசயம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment