பன்பொழி திருமலை குமாரசாமி கோயில்
எனக்கு சென்ற வாரம் பண்பொழி திருமலை குமாரசாமி கோயிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது! பல ஆண்டுகளாக அந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று எண்ணிய போதும் அவன் அருளாலே அவன் தாள் வணங்கும் பாக்கியம் இப்போதுதான் கிடைத்தது ! அந்த கோயில் சுமார் 540 அடி உயரமுள்ள குன்றின் மீது அமைந்துள்ளது !.
ஆதியில் இக்குன்றின்மீது ஒரு வேல் மட்டும்தான் இருந்தது .அந்த வேலை தினமும் பூவன் பட்டர் என்பவர் பூஜை செய்து வந்தார் .ஒருநாள் மதியம் அவர் புளியமரத்தடி ஒன்றில் உறங்கிக்கொண்டிருக்கும்போது அவர் கனவில் முருகன் வந்து சிறிது தூரத்தில் கோட்டைத் திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன் !அந்த இடத்தி எறும்புகள் சாரை சாரையாக
செல்லும் !அந்த இடத்தில் தோண்டி பார்த்தால் நான் இருப்பேன் என்று கூறி இருக்கிறார் ! பட்டர் விழித்து எழுந்ததும் அரசரிடம் கூறி உள்ளார் .அப்போது கேரளா ஆட்சியில் இருந்தது .பந்தள மகாராஜா வந்து சிலையை எடுத்து இந்த குன்றின் மீது பிரதிஸ்டைசெய்தார் .பின்பு அருள்செல்வர் சிவகாமி அம்மையாரால் இக்கோயில் கட்டப்பட்டது .இக்கோயில் கட்டி ஐநூறு வருடங்களுக்கு மேல் ஆயிரம் வருடங்களுக்கு உட்பட்டதாக இருக்கும் என்று கருதுகிறார்கள்!
இந்த மலைக்கு திரிகூட மலை என்றும் பெயர் உண்டு .இந்த முருகன் மீது பாடப்பட்ட திருமலைஆண்டவர் குறவஞ்சி என்னும் செய்யுள் தொகுப்பை உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் புதிப்பித்து வெளி யிட்டுள்ளார்!திருப்புகழில் அருணகிரி நாதரும் பாடி உள்ளார் . இந்த முருகனை திருமலை முருகன் என்றும் அழைப்பர். .முன்பு இந்த மலைக்கு 625 படிகள் ஏறிச்செல்ல வேண்டும் !
சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பாக இந்த மலையை சுற்றி சுமார் ஐந்து கோடி ரூபாய் செலவில் சுற்றுப் பதை அமைக்கபட்டுள்ளது ! அடி வாரத்தில் இருந்து குன்றின் மீது கோயில் வரை கார்,பைக் செல்ல சுற்றுப்பாதையில் நல்ல ரோடு அமைக்கப்பட்டுள்ளது . காருக்கு ஐம்பது ரூபாய் வசுலிக்கிறார்கள் .
இந்த கோயில் பண்பொழி என்ற ஊரில் இருக்கிறது .பைம்பொழில் என்னும் பெயர் மருவி பண்பொழி ஆகி விட்டது .தென்காசியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது .
இந்த ஊர் கேரளா பார்டரில் உள்ளது .இந்தக்கோயிலைச்சுற்றி ஐயப்பன் ஸ்தலங்களான ஆரியங்காவு அச்சங்கோவில் குளத்துபுழை ஆகியவைகள் உள்ளன .
இந்த மலையின் அடி வாரத்தில் வல்லப விநாயகர் கோயில் இருக்கிறது .மலை உச்சியில் உச்சி பிள்ளையார் கோயில் இருக்கிறது .அதற்கு பதினாறு படிக்கட்டுகள் உள்ளன. பதினாறு செல்வங்களும் பதினாறு படிக்கட்டுகளாக உள்ளதாக கூறுகிறார்கள் !
மலை உச்சியில் இருந்து பார்த்தால் சுற்றிலும் பச்சைப் பசேல் என்று மிகவும் ரம்மியமாகஇருக்கிறது ! நாங்கள் காரின் கதவை திறக்க முடியாதபடி காற்று அவ்வளவு வேகமாக வீசுகிறது !நடக்கும் போதே காற்று தள்ளுகிறது ! மலையில் இருந்து இறங்கவே மனமில்லை ! அதை வர்ணிக்க வார்தைகளில்லை !நேரில் சென்றால்தான் தெரியும் அந்த சுகானுபவம்!
![]() |
இக்கோயில் தீர்த்தத்தை அஷ்ட பத்ம குளம் என்று
அழைத்தனர் .தற்போது பூஞ்சுனை என்று அழைன்றக்கினர் !
இக்கோயில் தீர்த்தத்தை அஷ்ட பத்ம குளம் என்று அழைத்தனர் . தற்போது பூஞ்சுனை என்று அழைக்கின்றனர் !இக்கோயிலில் தங்கத்தேர் உள்ளது ! இக்கோயிலில் சித்திரை வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், கந்த சஷ்டி திருநாள்,கார்த்திகை திருநாள் போன்ற பல திருநாட்கள் விசேசமாக நடக்கும்! .இங்கு ஒரு பகுதியில் இடும்பன் கோயில் இருக்கிறது .கோயிலின் உள்ளே சப்த கன்னிகைகள் உள்ளனர் .இக்கோயில் காலை 6 முதல் மதியம்1 மணி வரையும் பிற்பகல் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும் என அறிவிக்கபட்டுள்ளது ! இக்கோயிலுக்கு வருவதற்கு தென்காசியில் இருந்தும் செங்கோட்டையில் இருந்தும் டவுன் பஸ் வசதிகள் உள்ளன ! பக்தர்கள் அனைவரு்ம் அங்கு சென்று அவன் தாள் வணங்கி அவன் அருள் பெற்று வாருங்கள் ! எல்லாம் அவன் அருள் !!






No comments:
Post a Comment