Sunday, 14 June 2015

நங்கநல்லூர் ஆஞ்சநேயர்

                                                    நங்கநல்லூர்  ஆஞ்சநேயர்
          
சென்னையை அடுத்த  நங்கநல்லூரில் பல  கோயில்கள் இருக்கின்றன !இந்த ஊருக்கு நங்கை  நல்லூர் ( திருமகள் வாழும் ஊர் )என காஞ்சி பெரியவர்  சந்திர சேகரேந்திர  சுவாமிகளால் பெயரிடப்பட்டது !இப்போது நங்கநல்லூர் என  மருவி  உள்ளது ! இந்த  ஊரில்  பல  கோயில்கள் உள்ளன !முக்கியமாக  சோழர் காலத்திய  தர்மலிங்கேசுவரர்  என்ற சிவன் கோயிலும்  பல்லவர் காலத்திய  லட்சுமி நரசிம்ம  நவநீத கிருஷ்ணன் கோயிலும் இவ்வூரின்  பழமையை  கூறுகின்றன !
 1989 ம்  ஆண்டு தொடங்கப்பட்டு 1995 ம் ஆண்டு கும்பாபிசேகம் செய்யப்பட்ட  ஆஞ்சநேயர்  கோயில் வந்த பிறகு  நங்கநல்லூர்  மிகவும் பிரபல்யம் அடைந்து விட்டது !இந்த ஆஞ்சநேயர் 32 அடி உயரம் உள்ளது !ஒரே கல்லில் செய்யப்பட்டது  !ஆறு அடி உயரமுள்ள தாமிர பீடத்தின்  மீது கூப்பிய கைகளோடு தொழுகிற  நிலையில் காட்சி அளிக்கிறார் !
  அளவில் மிகப்பெரிதான விஸ்வ ரூப ஆஞ்சநேய விக்கிரகம் ஸ்தாபனம் செய்யப்பட்டதால் நங்கநல்லூர்  நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகிற முக்கிய ஸ்தமாகிவிட்டது !
  இந்த கோயில் நங்கநல்லூர்  ராம் நகர் எட்டாவது தெருவில் உள்ளது .இந்த  ஆஞ்சநேயர் ஆதிவ் யாதிஹா பக்த ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார் !இங்குள்ள மூலவர் விஸ்வ ரூபத்தில் உள்ளார் ! ஆஞ்சநேயர் மேற்கு முகமாக காட்சி தருகிறார் !நுழை வாயிலும் மேற்கு முகமாக இருக்கிறது !அதன் கோபுரம் 90 அடி உயரம் உள்ளது !
.
Add caption

இந்த கோயில் ஆரம்பத்தில் ஸ்ரீ மாருதி பக்த சமாஜன் டிரஸ்ட் மூலம் நடத்தப்பட்டு வந்து தற்போது இந்து சமய அறநிலையத்துறையால் நடத்தப் பட்டு வருகிறது !
 பிரமாண்டமாக காட்சி அளிக்கும் ஆஞ்சநேயருக்கு பிரதி சனிக்கிழமை  தோறும் விசேச  பூஜைகள் நடை பெறுகின்றது !தவிற ராமர் அவதரித்த நாளாம் ராமநவமி  அதனை ஒட்டி நடத்தப்படும் ராம உற்சவம் போன்ற காலங்களில் வடை மாலை  மற்றும் துளசி மாலைகள் சாத்தப்பட்டு விசேச பூஜைகள்  நடத்தப்படுகின்றன ! வடை மாலைக்கு 6000 வடைகள்  தயார் செய்யப்பட்டு மாலையக்கப்பட்டு ஆஞசநேயருக்கு சாத்தப்பட்டு பக்தர்களுக்கு  விநியோகிக்க ப் படுகிற்கு தாம் !
ஆஞ்சநேயரை வணங்கினால் திருமண தோஷங்கள் நீங்கும் ! புத்திர பாக்கியம் கிட்டும் ! 
ஆஞ்சநேயரை வணங்கி அவன் அருளை பெறுவோமாக !








































































   
Add caption

No comments:

Post a Comment