Friday, 27 October 2017

இறைவன் எங்கும் உள்ளான்!

இந்த வருடம் சஷ்டி விரதம் தொடங்குய முதல் நாள்.நான் ஆறு நாளும் காலையும், மாலையும் சஷ்டி கவசம் படிப்பது என முடிவெடுத்தேன். முதல் நாள் காலை குளித்து விட்டு பூஜை அறை முன்பு கவசம் படித்தேன்.எழுத்து சிறியதாக இருந்தது. படிக்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.இதை யாரிடமும் சொல்லவில்லை.பெரிய எழுத்தில் இருந்தால் சௌகரியமாக  இருக்கும் என்று மனதில் எண்ணிக் கொண்டேன்.
சிறிது நேரம் கழித்து திருநெல்வேலி டவுண்  வாகையடி முக்கில் உள்ள டாக்டரை பார்க்கச் சென்றேன். என்னோடு இன்னும் பலரும் அங்கு  இருந்தனர்.
அங்கு அன்பர் ஒருவர் வந்தார்
வந்தவர் தன் கையில். இருந்த பையை திறந்து அதில் இருந்த கந்த சஷ்டி கவசம் புத்தகம் ஒன்றை என்னிடம் கொடுத்து படித்து விட்டு ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டு மெதுவாக கொடுங்கள் என்றார். நான் திறந்து பார்த்தேன். கந்த சஷ்டி கவசம் முழுவதும் பெரிய  எழுத்துக்களில் இருந்தது.கண்ணாடி இல்லாமலே படிக்கக் கூடிய அளவு பெரிய எழுத்தில் இருந்தது.
அவர் யார் என்று எனக்கு தெரியாது,! நான் யாரென்று அவருக்கு தெரியாது.நான் கேட்காமலேயே அவர் ஏன் என்னிடம் கொண்டு வந்து தர வேண்டும்.
நினைக்க நினைக்க கண்ணீர். பெருக்கெடுத்தது.முருகா!  என்னையும் ஒரு பொருட்டாக மதித்து நான் மனதில் எண்ணியதை  சில மணி நேரத்தில் ஒரு அன்பர் மூலம். கிடைக்கச் செய்தாயே! உன் கருணையை என்னவென்று உரைப்பேன்.யான் பெற்ற பேறு யார் பெறுவார் இவ்வுலகில்!
முருகா போற்றி! கந்தா போற்றி!!

No comments:

Post a Comment