Thursday, 26 October 2017

எத்தனுக்கு எத்தன்,!

ஒருவர் தனது கிணற்றை வேறொரு நபருக்கு கிறயம் செய்து கொடுத்து விட்டார். இரண்டு நாட்கள் கழித்து கிறயம் பெற்றவரிடம் சென்று
நான் உமக்கு கிணற்றை மட்டும் தான் கிறயம் செய்து கொடுத்தேன்.அதில் உள்ள தண்ணீரை கிறயம் கொடுக்க வில்லை.அதனால் அதில் உள்ள தண்ணீருக்கு தனியாக பணம் தர வேண்டும் என்றார்!
கிறயம் பெற்றவர் யோசித்தார்.
நானும் அது விஷயமாக உம்மை பார்க்க வர வேண்டும். என்று இருந்தேன். நல்ல வேளை நீரே வந்து விட்டீர்.
நீர் சொன்னபடியே கிணற்றை கிறயம் செய்து கொடுத்து விட்டீர்.ஆனால் தண்ணீரை அதிலேயே வைத்திருக்கிறீர். எனவே அதற்காக நீர் எனக்கு வாடகை தரவேண்டும் என்றார்!
இது எப்படி இருக்கு,!!
.

No comments:

Post a Comment