Sunday, 24 May 2015

அர்த்தமுள்ள திருமணச் சடங்குகள்!

                    திருமணம்
சென்ற வாரம் நான் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டேன் .அது ஒரு சீர்திருத்த திருமசெணம்.தாலி கடசென்ற வாரம் நான் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டேன் .அது ஒரு சீர்திருத்த திருமண.தாலி கட்டுதல் இல்லை.பராசக்தி படத்தில்உள்ளதைபோல இரண்டு மாலைகள் இரணடு   பேச்சாளர்கள் 
        அவ்வளவுதா ன் !


 ஆனால் அந்த காலத்தில் சடங்குகளில் சில புரிதல்களை வைத்து இருந்தார்கள் .மணமேடையில் பூப்பந்து எறிந்து விளையாடுவார்கள்.அதிலேயே மணமகன் மெலிதாக எறிகிறானா அல்லது முரட்டுத்தனமாக எறிகிறானா என்று அவள் தெரிந்து கொள்ளுவாள்!
         
மாலையில் நலங்கு என்ற சடங்கு நடைபெறும் அதில் பல்லாங்குழி விளையாடுதல் அல்லது சீட்டு விளையாடுதல் தலையில் அப்பளம் நொறுக்குதல் போன்ற விளையாட்டுகள் நடை பெறும். 
 மறு நாள் காலையில் கொப்பரை ஒன்றில் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் மற்றும் கலர்கள் கரைத்து அதி சிறு கத்தி மோதிரம் இவைகளை போட்டு இருவரையும் எடுக்க சொல்லுவார்கள் .மணமகன் கெட்டி காரனாக இருந்தால்  தான் இரண்டையும் எடுத்தாலும் ஒன்றை மனைவியிடம் கொடுத்துவிடுவான்.தண்ணீர் கலராக இருப்பதால் உள்ளே என்ன நடக்கிறது என்று வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாது!
 அவன் எடுத்த இரண்டையும் தானே வைத்துக்கொள்ளாமல் ஒன்றை அவளிடம் கொடுத்துவிட்டதால் அவன் மேல் அவளுக்கு நல்ல அபிப்ராயம் ஏற்படும்!தன்னை விட்டுக்கொடுக்காதவன் என்ற எண்ணம் உறுதிப்படும்!
விட்டுக்கொடுக்கும் எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக ஏறபடுத்தப்பட்ட சடங்குகள் இவைகள்!

No comments:

Post a Comment