செங்கோட்டை தாலுகா புளியரை அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத அ/மி சதாசிவ மூர்த்தி திருக்கோவில் தைத் திருக்கல்யாணத் திருவிழாவின் முதல் நாள் நானும் திரு உ.சிதம்பரபாண்டியன், கவிஞர் கோ.கணபதிசுப்பிரமணியன் மற்றும் சில அன்பர்களும் சென்று தரிசனம் செய்தோம்!
மற்ற சிவன் ஆலயங்களில் மூல ஸ்தானத்திற்கு தென் பக்க சுவரில் தட்சிணாமூர்த்தி இருப்பார்!ஆனால் இந்தக்கோவிலில் மூலமூர்த்திக்கும் நந்திக்கும் மத்தியில் தனிக்கோவில் கொண்டு அருள் பாலிக்கிறார்!இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கும் இங்கு பரிகாரம் காணலாம்!கோவில் ஏறுவதற்கு இருபத்தியேழு படிக்கட்டுகள் அமைந்திருக்கின்றன!
எந்த ஜாதிக தோசம் உள்ளவர்களும் 27 படிக்கட்டுகளில் ஏறிச் சென்றுதட்சிணாமூர்த்தியை தரிசித்தால் எல்லா தோசங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.64 சிவதிருமேனிகளுள் ஓன்று தட்சிணாமூர்த்தி யாகும்! பஞ்ச குண சிவ மூர்த்திகளுள் தட்சிணாமூர்த்தி சாந்த மூர்த்தியாகும்!
சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவம் கொண்டு சின் முத்திரை காட்டி உபதேசம் செய்கிறார்!சின் முத்திரை!ஞானத்தின் அடையாளம்.பெருவிரலின் அடிப்பாகத்தைசுண்டுவிரல் தொடவும் ஏனைய விரல்கள் விலகிநிற்கும் முத்திரை இது! உயிரானது மும்மலங்களில் இருந்து நீங்கி இறைவன் திருவடியைஅடைந்துஇன்புறுவதே இம்முத்திரையின் தத்துவமாகும்!
டவுண்பஸ் வசதி இருக்கிறது!விரும்புகிறவர்கள் தரிசித்து வருக!!
மற்ற சிவன் ஆலயங்களில் மூல ஸ்தானத்திற்கு தென் பக்க சுவரில் தட்சிணாமூர்த்தி இருப்பார்!ஆனால் இந்தக்கோவிலில் மூலமூர்த்திக்கும் நந்திக்கும் மத்தியில் தனிக்கோவில் கொண்டு அருள் பாலிக்கிறார்!இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கும் இங்கு பரிகாரம் காணலாம்!கோவில் ஏறுவதற்கு இருபத்தியேழு படிக்கட்டுகள் அமைந்திருக்கின்றன!
எந்த ஜாதிக தோசம் உள்ளவர்களும் 27 படிக்கட்டுகளில் ஏறிச் சென்றுதட்சிணாமூர்த்தியை தரிசித்தால் எல்லா தோசங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.64 சிவதிருமேனிகளுள் ஓன்று தட்சிணாமூர்த்தி யாகும்! பஞ்ச குண சிவ மூர்த்திகளுள் தட்சிணாமூர்த்தி சாந்த மூர்த்தியாகும்!
சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவம் கொண்டு சின் முத்திரை காட்டி உபதேசம் செய்கிறார்!சின் முத்திரை!ஞானத்தின் அடையாளம்.பெருவிரலின் அடிப்பாகத்தைசுண்டுவிரல் தொடவும் ஏனைய விரல்கள் விலகிநிற்கும் முத்திரை இது! உயிரானது மும்மலங்களில் இருந்து நீங்கி இறைவன் திருவடியைஅடைந்துஇன்புறுவதே இம்முத்திரையின் தத்துவமாகும்!
டவுண்பஸ் வசதி இருக்கிறது!விரும்புகிறவர்கள் தரிசித்து வருக!!
மிகவும் சிறப்பானதோர் ஸ்தலம் பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.
ReplyDelete