வெடிச்சத்தமும் மேளச்சத்தமும்
சென்ற வாரம் கேரளாவில் ஒரு கோயில் விழாவில் வெடி வெடித்ததில் விபத்து ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்ததையும் அநேகர் படு காயம் அடைந்ததையும் கேள்வி பட்டு இந்த நாடே அதிர்ச்சி அடைந்தது .ஆனால் நாம் அந்த நேரத்தில் அப்படி செய்யக்கூடாது இப்படி செய்யக்கூடாது என்று சொல்லுகிறோமே தவிர சிறிது நாளில் அதை அறவே மறந்து விடுகிறோம் .இது நம் நாட்டின் சாபக்கேடு! .
இதே போல திருமண மண்டபங்களிலும் நடை பெறுகிறது ! தமிழ் நாட்டில் திருமண மண்டபம் முழுவதும் ஊருக்குள் தான் இருக்கின்றன !மண்டபத்தை சுற்றிலும் வீடுகள் இருக்கின்றன !
இவைகளை கவனத்தில் கொள்ளாமல் திருமணத்தில் அதிக சத்தத்துடன் வெடிகளை வெடிக்கிறார்கள்! .மண்டப வாசலில் வைத்து செண்டை மேளம் அடிக்கிறார்கள் !நாதஸ்வர மேளத்திற்கும் செண்டை மேளத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது !செண்டை மேளத்தை அதிக சத்தத்துடன் அடிப்பதால் பக்கத்து வீடுகளில் உள்ள பச்சை குழந்தைகளும், படிக்கும் பிள்ளைகளும், வயதான முதியவர்களும் படும் பாடு மிகவும் பரிதாபம் !
தூங்கும் குழந்தைகள் இந்த சத்தத்தில் பதறி எழுந்து அழுவது மிகவும் கொடுமை !செண்டை மேள சத்தத்தில் படிக்க முடியாமல் பிள்ளைகள் கலங்குகிறார்கள் ! வயதானவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம் !நெஞ்சில் அறைவது போன்ற அந்த சத்தத்தால் அவைகள் பாடு மிகவும் அவஸ்தை !
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்லுவார்கள் ! எல்லோருடைய வாழ்த்துக்களையும் பெற வேண்டும் ! பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு துன்பத்தை கொடுத்து இன்புற வேண்டாமே !
மண்டபத்தை வாடகைக்கு விடுபவர்களும் திருமண வீட்டாரும் சிந்திப்பார்களாக !!

No comments:
Post a Comment